சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மதுரை, ஏப்.18- சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் 9 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்து ணவு ஊழியர்களிடமே வழங்கிட வேண்டும். 3 மாதமாக வழங்காமல் உள்ள மானிய தொகையை உடனே வழங்கிட வேண்டும். கேஸ் சிலிண்டரை அரசே நேரடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடை பெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பி. அய்யங்களை தலைமையில் போராட்டம் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் ஆ. அமுதா பேசி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதி ராஜா நிறைவுரையாற்றினார். திண்டுக்கல் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பி.இராமு தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் மணிக்காளை கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநிலச்செயலாளர் ஜெசி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி, மாவட்டச்செயலா ளர் விவேகானந்தன் உள்ளிட்ட தோழமை சங்கத்தினர் ஆத ரித்துப் பேசினர்.
மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து மேயர் தலைமையில் ஆய்வு
மதுரை, ஏப்.18- மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறு வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், முன்னிலையில் செவ்வாயன்று நடைபெற்றது. சித்திரை திருவிழா எதிர்வரும் 23.4.2023 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ளது. திருவிழாவினை காண்பதற்கு மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்வார்கள். மீனாட்சி திருக்கல்யாணம் நடை பெறும் நாளில் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் வைகை ஆற் றின் இரு கரைப்பகுதிகள் உள்ளிட்ட முக்கியமான பகுதி களில் சுழற்சி முறையில் தேவையான பணியாளர்களை கொண்டு சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பிற் காக மருத்துவ குழு, தீயணைப்பு ஆம்புலன்ஸ் வசதி, தக வல் மையம், சி.சி.டி.வி. கேமிரா, தன்னார்வலர்கள், மின்சா ரம், மின்விளக்கு, சாலைகள் சீரமைத்தல் மற்றும் பொது மக்களின் வசதிக்காக கூடுதலாக குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை மற்றும் இ-டாய்லெட் வசதி ஏற்படுத்துவது, கொசு புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதி களும் ஏற்படுத்தப்படும் என்றும். இத்திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை போக்குவரத்து இடையூறு இன்றி நிறுத்தி செல்வதற்கும், பொதுமக்கள் ஆங்காங்கு திருவிழாவினை காண்பதற்கு எல்.இ.டி. திரை வசதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங் கள் மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரோன் மூலமாக கண்கா ணித்தல், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், மருத் துவ சேவை வழங்குதல், அவசர உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரிசகுளம் கோவில் திருவிழா
சிவகங்கை, ஏப்.18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் மிளக னூர் ஊராட்சி எஸ்.கரிசகுளம் கேட்டவரம் தரும் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஆலய 45வது ஆண்டு பங்குனித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்போடு நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் லெட்சுமணராக்கு, செர்டு தொண்டு நிறுவன இயக்குநர் டாக்டர் எல்.பாண்டி பொதும்பொன்னு ஆகியோர் தலைமையில் திருவிழா நடைபெற்றது. பல்வேறு கிராம மக்கள் பங்கேற்ற அன்ன தானம் நடைபெற்றது. இக் கோயிலுக்கு செல்கிற சாலை மேடும் பள்ளமுமாக இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகினர்.
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
வெம்பக்கோட்டை, ஏப்.18- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட் டாசு ஆலையில் நள்ளிரவில் வெடி விபத்து ஏற்பட்டது. வெம்பக்கோட்டை அருகே உள்ளது எதிர்கோட்டை. இங்கு இமயவர்மன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை அதே பகுதியில் இயங்கி வருகிறது. 10-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தொழிலா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று மாலை தொழிலாளர்கள் அனைவரும் வேலையை முடித்துவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஆலை யில் இருந்த ஒரு அறையில் பட்டாசு மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதையடுத்து, அந்தப்பகுதி மக்கள் வெம்பக் கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிக்கும் அறை ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.