மதுரை, டிச. 17- சிவகங்கை மாவட்டம் முத்துவன் திடல் கிராமத்தில் உள்ள ஐந்து கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயத்தை பாது காக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் முறையாக அளவீடு செய்து மூன்று மாதத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் முத்துவன் திடல் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக் கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பகுதியில் உள்ளது. இந்த கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றர்.
இவர்களில் பெரும்பான்மையோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் விவசாயத்திற் கும் குடிநீருக்கும் பெரிய கண்மாய், திரு மனேந்தல் கண்மாய், சின்ன கண்மாய் ஆகி யவற்றை தான் நம்பியுள்ளனர். இந்நிலையில் எங்கள் ஊரைச் சேர்ந்த தனி நபர்களான மாயாண்டி, ராமலிங்கம் சேதுஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கண்மாய் பகு திகளில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இவ்வாறு கண்மாய் பகுதிகளை ஆக்கி ரமிப்பு செய்து தென்னை தோப்புகளாக உரு வாக்கியுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் தங்க ளுக்கு சொந்தமான விளைநிலங்களுக்கு கண்மாய் நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வருகின்றனர். இதனால் மற்ற விவசாயிகள் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற செயல்களால் கண் மாயில் நீர்தேக்க முடியாமல் நீர் வற்றி வருகிறது.
இதனால் விவசாயம் முழு மையாக பாதிக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் பலம் மிக்கவர் களாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே மேற் கண்ட கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்த ரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், பி.புகழேந்தி ஆகியோரின் நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை செய்யும் சிறப்பு அமர்வில் செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட கண்மாய்கள் பொதுப் பணித்துறைக்கு சொந்தமானது. அதனை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நீர்நிலை பகுதி மற்றும் கண்மாய் பகுதி களில் ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய விதிகளை பின்பற்றி நோட்டீஸ் வழங்கி, முறையாக அளவீடு செய்து கண்மாய் ஆக்கிரமிப்பு களை மூன்று மாதத்திற்குள் அகற்ற வேண் டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை யை முடித்து வைத்தனர்.