districts

img

மீனவர்களுக்கு மழை வெள்ள நிவாரண நிதி

நாகர்கோவில், டிச.5- கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் மீன் பிடி தொழி லாளர் சங்கம் சார்பில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வெள்ள நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்று ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துவருபவர்கள் கடந்த மூன்று மாதங்களாக பெரும் மழை மற்றும் புயல் எச்சரிக்கை, இயற்கை சீற்றங்களின் கார ணங்களால் மீன்பிடித் தொழி லுக்கு செல்ல அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்து அமல் படுத்தி வருகிறது. இக் காலகட்டத் தில் வேறு எந்த உபதொழிலும் இல்லாததால் எவ்வித வருமான மும் இன்றி பசியும், பட்டினியு மாக கடன் தொல்லையுடன் வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு மீன வர்கள் தள்ளப்பட்டு வருகின்ற னர். எனவே ஒட்டுமொத்த மீன வர்களின் வாழ்வாதரத்தை ஓர ளவிற்கு நிவர்த்தி செய்ய மழை நிவாரணமாக பாண்டிச்சேரி, கேரளம் மாநில அரசுகள் சிறப்பு நிதி வழங்கியுள்ளது. அதைப் போன்று தமிழக மீனவர்களுக் கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. வள்ளம் சங்கம் மணக்குடி தலைவர் எம். ததேயு தலைமை வகித்தார் மற்றும் தமிழ்நாடு மீன்பிடிதொழிற்சங்க கூட்ட மைப்பு தலைவர் ஜி. செலஸ்டின், பொதுச்செயலாளர் எஸ்.அந் தோணி, மீன்தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் பி. சகாயபாபு, தலைவர் கே. அலெக்சாண்டர், துணைத் தலை வர் எஸ்.தனிஷ், எஸ்.தங்கம் உள் ளிட்டோர் பேசினர்.