திருச்சிராப்பள்ளி, பிப்.14- மீனாட்சி மருத்துவமனையின் 10-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வ லர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல்பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாண வர்கள் மற்றும் மாணவியர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறையின் தலைவரும், இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கத்தின் தலைவருமான மருத்து வர் சரவணவேல் அளித்தார். பயிற்சியை கல்லூரி செயலாளர் முனைவர் ராஜேந்தி ரன், கல்லூரி முதல்வர் முனைவர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் சித்ராதேவி ஆகி யோர் துவக்கி வைத்தனர். 500-க்கும் மேற்பட்ட மாணவர்க ளுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிங்ஸ் கல்லூரி நாட்டுநலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு மருத்துவமனை நிர்வாகத் துறை தலைவர் ஞானசௌந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.