சிவகாசி, ஏப்.20- சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது மாரனேரி. இங்கு, தங்கப்பாண்டி என்பவருக்குச் சொந்த மான கணேஷ்வரி பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு பட்டாசு தயாரிக்கும் வேலை நடைபெற்று வரு கிறது. இதில் 200க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டி ருந்தனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக, எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற் பட்டது. இதில் ஒரு அறை தரைமட்ட மானது. இந்த விபத்தில், அரவிந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். பின்பு, தகவலறிந்து விரைந்து சென்ற சிவகாசி தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த அரவிந்தின் உடலை மீட்டு கூராய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்து கின்றனர்.