districts

img

ஸ்பிக் நிறுவனத்தில் உர உற்பத்திப் பணிகள்: தூத்துக்குடி ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி, ஜூலை 2- தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் நடைபெற்று வரும் உர உற்பத்தி பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.  தமிழக முழுவதும் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை மூலம் மாதம் ஒருமுறை சுமார் 36,000 முதல் 38 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஸ்பிக் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் உர உற்பத்திப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது,  தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். குருவை சாகுபடிக்கு தேவையான யூரியா, டிஏபி உரம் அனுப்புவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.  தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் மூலம் ஒவ்வொரு மாதமும் 36-ல் இருந்து 38-ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குருவை சாகுபடிக்காக முதற்கட்டமாக விவசாயிகளுக்கு தேவையான 5-ஆயிரம் மெட்ரிக் டன் டி.ஏ.பி ஒரு வாரத்தில் அனுப்புவதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. ஸ்பிக் நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் உரங்களை 33 சதவீதத்தை தமிழக வேளாண்மை துறை மூலம் விநியோகம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என கூறினார்.