சென்னை, நவ. 29- டெஸ்ட் பர்ச்சேஸ் (சோதனை கொள்முதல்) நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்க ங்களின் பேரமைப்பின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாநில வணிகவரித் துறை அதிகாரிகளிடம் கவன ஈர்ப்பு மனு அளிக்கும் போராட் டம் செவ்வாயன்று (நவ. 29) நடை பெற்றது. அதன் ஒரு பகுதியாக தென் சென்னை வடக்கு, வடசென்னை மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திரு வள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங் களை ஒருங்கிணைத்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநிலப் பொரு ளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ் ஆகியோர் பூவிருந்தவல்லி வணிக வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். பின்னர் ஏ.எம்.விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், டெஸ்ட் பர்ச்சேஸ் தொடர்பாக வணிக வரித்துறை கடந்த செப்டம்பர் அன்று அறிவிப்பு வெளியிட்டு, அதனடிப் படையில் வணிக வரித்துறை அதி காரிகள் சில்லறை வணிகம் செய்யும் வணிகர்களிடம் பொருட்களை வாங்கி அதை டெஸ்ட் பர்ச்சேஸ் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந் துள்ளது.
அனைத்து சில்லரைக் கடைக்கா ரர்களும், பொருட்களை வாங்கும் போது அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்த பொரு ட்கள் ஏற்கனவே வரி விதிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிக வரித்துறை அதிகாரிகள், சில்லறை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில்,பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை எனக் கூறி, அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல. இது சில்லறை சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதா ரத்தையே மிகப்பெரும் கேள்விக் குறியாக்கும் செயலாகும் என்றார். வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள், துறை முக கண்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்படும் நிலையில், அவற்றை கொண்டு வருகின்ற நிறுவனங்களை ஆய்வு செய்தால் மட்டுமே வரி ஏய்ப்பு முழுமையாக தடுக்கப்படும். எனவே, வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தி யாளர்கள், தயாரிப்பாளர்கள், கனரக வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வரி ஏய்ப்பை முழுமையாக தடுக்க வேண்டும். இந்த டெஸ்ட் பர்ச்சேஸ் குறித்த நடைமுறை சம்பந்தமான தொடர் விழிப்புணர்வை அனைத்து வணிகர் களுக்கும் ஏற்படுத்திய பிறகு, ஆண்டுக்கு 5 கோடிக்கு மேல் விற்று வரவு செய்கின்ற வணிகர்களிடம் மட் டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறு, குறு வணிகர்களுக்கு விலக்கு அளித்து ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.