ஒட்டன்சத்திரம், ஏப்.17- தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத தால் செடிகளை விவசாயிகள் அழித்து வரு கின்றனர். ‘உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்று சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு விவ சாயிகளின் நிலைமை பரிதாபத்திற்குரிய தாக மாறிவிட்டது. ஒரு நிலத்தை விற்று மற்றொரு பகுதி யில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிருக்கு உரம், பூச்சி மருந்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் பின்னர் விலை யில்லாமல் வெறுப்படைந்து சாகுபடியை கைவிட்டு மாற்றுவேலைக்குச் சென்று விடு கிறார்கள். தக்காளி, முருங்கை, கத்தரி, கொத்த மல்லி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை குறைவாகவும், சில நாட்கள் கூடுதல் விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயி ரிட்டுள்ளனர். தற்போது தக்காளி விளைச்சல் அதி கரித்துள்ள நிலையில் அதற்கு போதிய விலை இல்லை.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.350 வரை விற்றது. தற்போது அதிக வரத்தால் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் தக்காளிப் பழத்தை பறிக் கும் ஆட்களுக்கு கூட சம்பளம் கிடைப்ப தில்லை. தக்காளிப் பயிரை அழிப்பதற்கு கூடுதல் செலவாகும். என்பதால் சாகுபடி செய்த தக்காளிக்கு தண்ணீர் பாய்ச்சால் வெயிலில் கருக வைத்து அழிக்கும் நிலை மைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஒண்டிபொம்மன்நாயக்க னுரச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறியதா வது:- மூன்று ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந் தேன். இந்த மூன்று ஏக்கருக்கு உழுவதற்கு ரூ.13 ஆயிரம், நாற்றுக்கு ரூ.20 ஆயிரம், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரம், மருந்து உரத்திற்கு ரூ.50 ஆயிரம் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு ரூ.3 செலவாகிறது. தற்போது ஒரு கிலோ தக் காளி ரூ.10-க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ 22க்கு மேல் விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளிச் செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதனால் மூன்று ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய- மாநில அரசுகள் விவசாயப் பொருட்க ளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுவதால் தக் காளி ஜூஸ் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.