districts

img

விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் ஐஓசி கூடுதல் இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

மதுரை. மார்ச்.11- எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்க ளுக்கான சமமான இழப்பீடு வழங்க வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று மதுரை மாயாண்டி பட்டியில் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சென்னை எண்ணூர்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற் கொண்டு வருகிறது. மதுரை கிழக்கு தாலுகா அயிலாங்குடி ஊராட்சிக்குட்பட்ட மாயா ண்டிபட்டி கிராமத்தில் இரு போக விளை நிலங்களில் குழாய் பதிப்பதற்கு மிகக் குறைவான இழப்பீடு வழங்கப்படுகிறது. இழப்பீட்டில் பாரபட்சம் இரு போக சாகுபடி விளை நிலத்தில் ஒரு பகுதியில் உள்ள நிலங்களுக்கு ஹெக்டேரு க்கு ரூ.94 லட்சம் இழப்பீடும் சாலையின் மற்றொரு பகுதியில் உள்ள விளை நிலங்க ளுக்கு ஹெக்டேருக்கு ரூ.9 லட்சமும் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது ஒரு செண்ட் நிலத்திற்கு ஒரு வரப்பின் ஒரு புறத்தில் ரூ.45 ஆயிரம் ரூபாயும், மற்றொரு புறத்தில் வெறும் 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.  எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் சமமான இழப்பீடு வழங்கவேண்டும். அத்துடன் பட்டியலின மக்கள் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும்.

குத்தகை விவசாயிகளுக்கு அவர்க ளுக்குரிய இழப்பீட்டை நேரடியாக வழங்க  வலியுறுத்தி மாயாண்டிபட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், ஒன்றி யச் செயலாளர் சேகர், தலைவர் தனசேக ரன், ப.முருகன், கி.முருகேசன் மற்றும் பாதிக் கப்பட்ட விவசாயிகள் ஆண்களும், பெண்க ளும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் மேலூர் ஆர்டிஒ பிர்தௌஸ் பாத்திமா பேச்சுவார்த்தை நடத்தினார். அப் போது விவசாயிகள் தங்களது கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த ஆர்டிஒ மாவட்ட ஆட்சி யர், முதல்வர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.  அவர் வந்தவுடன் உரிய தீர்வு காணப் படும். ஆட்சியருடன் பேசுவதற்கு விவசாயி கள் சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்படுவர். அதுவரை குழாய் அமைக்கும் பணி நிறுத் தப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தை தற் காலிகமாக ஒத்திவைத்தனர்.