நத்தம், ஜன.28- திண்டுக்கல் மாவட்டம் செந்துறையில் வெள்ளரி தொழிற் சாலைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நத்தம் அருகேயுள்ள செந் துறை-நல்லபிச்சன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளரி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இத்தொ ழிற்சாலைக்கு செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக வருவாய் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் முறை யாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை என கூறி, செந்துறை பேருந்து நிலையம் முன்பு தொழிற்சாலைக்கு வெள்ளரி கொண்டு செல்லும் விவசாயி கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மறியலில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.