districts

img

மழைப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.8 கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக பெய்த கன மழையால் பல்வேறு துறை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில் விவ சாய நிலங்களும் விவசாயிக ளும் பெருமளவில் உருக்குலைந் துள்ளனர். இதுவரை விவசாயிக ளுக்கு உரிய நிவாரணம் வழங் காத நிலையில் இத்துயரில் இருந்து மீள முடியாமல் விவசா யிகள் அவதிபட்டு வருகின்றனர்.  கன்னியாகுமரி மாவட்டத் தில்   கனமழையால் பாதிக்கப் பட்டுள்ள பயிர்களுக்கும் விவசாய விளை நிலங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது  தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலை வர் என். முருகேசன் தலைமை வகித்தார், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். ரவி, மாவட்ட தலைவர் சைமன் சைலஸ், மாவட்ட துணை தலைவர் டி. ஆறுமுகம் பிள்ளை, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் என். எஸ் கண்ணன், சிபிஎம் நாகர்கோவில் மாநகர செயலாளர் கே. மோகன், கட்சியின் அகஸ்தீஸ்வரம் வட்டார செயலாளர் எம். சிவதாணு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.