districts

img

எரிவாயு குழாய் பதிக்கும் நிலங்களுக்கு சமமான இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஏப்.9- இயற்கை எரிவாயு குழாய் பதிப்ப தற்காக கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கு சமமான, நியாயமான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை மேலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவ சாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு வட்டம் அய்லாங்குடி ஊராட்சியை  சேர்ந்த மாயாண்டிபட்டி கிராம விவ சாயிகளின் இரு போக விளை நிலங்கள் இந்தியன் ஆயில் கார்ப்ப ரேசனுக்காக கையகப்படுத்தப் பட்டன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் வயலின் ஒரு வரப்புக்கு ஒரு பக்கம் செண்ட் நிலத்துக்கு ரூ. 45 ஆயிரமும் மறுபக்கம் கூடுதலாக ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்  டது. பெரும்பாலான விவசாயிகளுக்கு வெறும் ரூ.4 ஆயிரம் வீதம் இழப் பீடு வழங்கப்பட்டது. இதனால் சமமான இழப்பீடு வழங்கக்கோரி கோட்டாட்சியரை சந்தித்து கடந்த மாதம் 10 ஆம் தேதி மனுக் கொடுத்த னர். அப்போது அவர், நான் ஆட்சி யருக்கு பரிந்துரை செய்கிறேன். ஆனால் ஐஒசி வேலையை தடுக்க வேண்டாம் என்றார்.

 ஆனால் விவசாயிகள், பிரச்சனை தீரும் வரை குழாய் பதிப்பு வேலையில் ஈடுபடுவதை நிறுத்தச் சொன்னார்கள். அதனால் மறுநாள் விவசாயிகள் வய லில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.இதையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர், ஆட்சியரை சந் திக்க ஏற்பாடு செய்கிறேன். போராட் டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த இரண்டு நாளில் காவல்துறை மூலம் குழாய் பதிப்பு வேலை துவங்கியதை எதிர்த்த விவசாயிகளில் 8 பேரை கைது செய்து ஒரு நாள் காவலில் வைத்தனர். அதன்பிறகு ஆட்சியரை சந்தித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தொகுதி எம்எல்ஏ வும் அமைச்சருமான பெ.மூர்த்தி ஆகி யோரையும் விவசாயிகள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்து ரைத்தனர். அவர்களும் கோட்டாட்சி யரிடம் பேசினர். ஆயினும் உரிய நட வடிக்கை எடுக்கப்படவில்லை.  அதனால், சமமான இழப்பீடு வழங்கக்கேட்டும், கோட்டாட்சியர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கோரிக்கைகளை விளக்கி விவசாயிகள் சார்பில் ப. முரு கன், சங்கத்தின் நிர்வாகிகள் பி. தன சேகரன், அடக்கி வீரணன் ஆகியோர் பேசினர். நிறைவாக எஸ்.பி.இளங் கோவன் பேசுகையில், விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் போராட்டம் தீவிரமாகும் என்றார்.  ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட விவசாயிகளும் விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.