districts

உழவர் சந்தை வியாபாரிகள் போராட்டம்

பழனி, ஜூன் 6-  பழனி நகராட்சி சார்பாக காந்தி  மார்க்  கெட் கடைகளை இடித்துவிட்டு புதிய கடை களை கட்டுவதற்காக  அங்குள்ள வியாபாரி களுக்கு உழவர் சந்தை அருகே கடை அமைத்துக் கொடுக்கப்பட்டது.   உழவர் சந்தை நேரத்தில் வெளியே வந்து கடை போடுவதால் வியாபாரம் பாதிக்  கப்படுவதாக உழவர் சந்தை வியாபாரி கள் போராட்டம் நடத்தினர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) வெற்றி செல்வி,   இனிமேல் உழவர் சந்தை நேரத்தில் காந்தி  மார்க்கெட் வியாபாரிகள் கடையை திறக்க மாட்டார்கள் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.