திண்டுக்கல், ஜன.3- நிலக்கோட்டை அருகே அரசு நிலங் களை தனியார் சோலார் நிறுவனம் ஆக்கி ரமித்து உள்ளதாக கிராம மக்களும், விவ சாயிகளும் மனு நீதி நாளில் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மனு நாளின் போது நிலக்கோட்டை அருகேயுள்ள மல்ல னம்பட்டி, பூசாரிபட்டி, நடகோட்டை உள் ளிட்ட 5க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மனுக் கொடுக்க வந்திருந்தனர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம், 5க்கும் மேற்பட்ட குளங்கள், ஆள் துளை கிணறுகள் போன்றவற்றை தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளதாக ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். விவ சாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு மிரட்டி வாங்குவதாக புகாரில் கூறியுள்ள னர். தற்போது 800 ஏக்கர் நிலம் வரை வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 600 ஏக்கர் நிலம் அரசாங்கம் கொடுத்த நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் என்றும், 200 ஏக்கர் மட்டுமே விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக 15 முறை ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றும் தெரிவித்தனர். (நநி)