தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் மறைந்த தியாகி பி.சீனிவாசராவின் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் ,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி.கண்ணன் ,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு ,மாவட்ட பொருளாளர் கே.தயாளன் ,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இ.தர்மர்,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் .