விருதுநகர், மே.27- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே 200க்கும் மேற்பட்ட விவசாயிகுக்கும், அரசுக்கும் சொந்தமான நிலங்களை தனி நபருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேக நாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விளை நிலங்க ளுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. 40முதல் 50 ஆண்டுகள் பழ மையான மரங்களை ஒரே நாளில் அழித்து விடுகின்றன. இதனால், எங்களுக்கு ஏராள மான நஷ்டம் ஏற்படுகிறது. வனத்துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, எங்களது தோட்டங்க ளுக்கு இலவசமாக மின்அதிர்வு வேலி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், வன விலங்குகளால் விவ சாயிகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மேலும் விலங்குகள் விவசாயிகளின் நிலங்க ளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. ஆனால், வனத்துறையினர், 4ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க மறுக்கின்றனர் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய ஆட்சியர், அடுத்த குறை தீர் கூட்டத்திற்குள் மின் அதிர்வு வேலி அமைக்க ஏற்பாடு செய்யப் படும் என்றார்.
இரும்புக் கதவு போட்டு வனத்துறை அராஜகம்
பின்பு, பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கததின் மாவட்ட செயலாளர் வி.முருகன், கோவிலாறு அணைக்கு செல்லும் பாதை யில், விவசாயிகள் தங்களது பட்டா நிலங்க ளுக்கு கூட செல்ல முடியாத வகையில் வனத் துறையினர் இரும்பு கதவு போட்டு பூட்டி யுள்ளனர். இவர்களுக்கு யார் அந்த அதி காரத்தை வழங்கியது. இதனால், மீன்பாசி ஏலம் எடுத்தவர்கள் அணைக்கு செல்ல முடியவில்லை. அணையை பார்வையிட வும், பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளும் செல்ல முடியாத நிலை உள்ளது என தெரி வித்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், அடுத்த வாரம் வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறையினருக்கான கூட்டம் நடத்தி அதில் நல்ல முடிவு எட்டப்படும் என்றார். காரியாபட்டி பகுதியில் 50 ஏக்கர் வரை அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. மேலும், பூமிதான நிலம் 10 ஏக்கரை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார் என புகார் தெரி வித்தேன். பின்பு, ஆக்கிரமிப்பு எடுக்கப் பட்டது. மேலும் என் மீதும் கிராம உதவியா ளர் மீதும் தாசில்தார் பரிந்துரையின் பேரில் ஜாமீனில் வெளி வர முடியாத வகையில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றத் தில் ரூ.70 ஆயிரம் செலுத்தி ஜாமீன் பெற்றுள் ளேன். அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிக்கக் கூடாது எனக் கேட்ட குற்றத்திற்காக இந்த தண்டனை கிடைத்துள்ளது என நாசர் புளி யங்குளத்தைச் சேர்ந்த சதுரகிரி என்பவர் வேதனையுடன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய வட்டாட்சி யர், கையூட்டு பெற்றுக் கொண்டு தனி நப ருக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் வாய் மொழி உத்தரவாக புகார் செய்துள்ளார். இதையடுத்து, காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. எனவே, வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்பு, பதிலளித்த ஆட்சியர், அடுத்த வாரம் கோட்டாட்சியர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இப்பிரச்சனை குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
காணாமல் போன வண்டிப் பாதைகள்
சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான நிலங்களில் இருந்த வண்டிப் பாதைகள் தற்போது காணாமல் போய் விட்டன. பாதைகள் வரைபடங்களில் உள்ளன. ஆனால், அங்கு சென்று பார்த்தால், அதை பட்டாசு ஆலைகளும், கல்குவாரிகளும் ஆக்கிரமித்து உள்ளன என நாராயணசாமி புகார் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார். திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மின் மோட்டார்களை சிலர் இரு சக்கர வாகனங்களில் வந்து திருடிச் செல்கின்றனர். திருடியவர்களை பிடித்துக் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லையென டி.வேப்பங்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். முடுக்கன்குளத்தில் 14 மின் கம்பங்கள் சேதமடைந்தன. தங்களது உத்தரவின் பேரில் புதிய மின் கம்பங்கள் கொண்டு வந்தனர். ஆனால், அதை நடவில்லை எனவும், தங்க ளது பகுதியில் நெல் விளைச்சல் அதிகம் உள்ளது. எனவே, நாங்கள் அரசுக்கு தானமாக நிலம் வழங்குகிறோம். அதில் டி.என்.சி.சி குடோன் அமைத்து தாருங்கள் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து மின் கம்பங்களை நடுவ தற்கு மின்வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். காரியாபட்டி அருகே உள்ள மொச்சிபத்தி, பூலாபத்தி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மற்றும் அரசுக்கு சொந்தமாக 369 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கடந்த 2009 ஆண்டு தனி நபர் ஒருவர் போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்தார். இதை எதிர்த்து விவசாயிகள் போராடியதால், அந்த பதிவு ரத்து செய்யப்பட்டது. தற்போது, அதேநபர், நீதிமன்றத்தில் வித்தியாசமான தீர்ப்பை பெற்று, மாவட்ட பதிவாளர் ஆதர வுடன் அதே நிலங்களை மீண்டும் தனது மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்துள் ளார். எனவே, மாவட்ட பத்திர பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பத்திரப் பதிவை ரத்து செய்திட வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தவறு செய்தால், அதுபற்றி பொது இடங்க ளில் தெரிவிக்காமல், என்னிடம் நேரடியாக எப்போது வேண்டுமானாலும் புகார் தெரி விக்கலாம் என தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண் என ஏராளமான ஏழைகள் நகைக் கடன் பெற்றுள் ளனர். வங்கி நிர்வாகம் தொடர்ந்து வட்டி கட்டச் சொல்லி நிர்ப்பந்தம் செய்த கார ணத்தால் வட்டியை செலுத்தியுள்ளனர். ஆனால், வட்டியை செலுத்தியதால் தள்ளுபடி கிடையாது என தற்போது கூறி விட்டனர். இது தவறான செயலாகும். இதுகுறித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே, அவர்களுக்கும் நகைக் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் தெரிவித்தார். அரசு உத்தரவு வருவதற்கு முன் வட்டியை செலுத்தியிருந்தால் என்ன செய்ய முடியும். இருந்த போதும், அனைவரின் மனுக்களுக்கும் உரிய முறையில் பதில் கூற வேண்டுமென கூட்டுறவுத்துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.