தேனி, டிச.22- வருசநாடு மலைக்கிராமங்களில் நீண்ட காலமாக குடியிருந்து, விவசாயம் செய்து வரும் மக்களுக்கு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். 24 கிராமங்களில் மறு குடியமர்வு விவரப் பட்டியல் தயா ரிக்கும் பணியை கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்ட செய லாளர் டி.கண்ணன் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, ஆண்டிபட்டி வட்டம், கடமலை -மயிலை ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளில் 24 கிராமங்களில் வன விவசாயிகள் தலை முறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர். வன உரிமை சட்டம் 2006 -ன் படி பட்டா வழங்க வேண்டும் என முறைப்படி மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
வன உரிமை சட்டம் 2006 -ன் படி மேக மலை, தும்மக்குண்டு, வருசநாடு, முறுக்கோடை ஆகிய கிராம ஊராட்சி களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வன உரி மைக்குழு அமைக்கப்பட்டது. இதில் மேகமலை, தும்மக்குண்டு வன உரிமைக்குழு வன விவசாயிகளிடம் மனுக் களை பெற்றுள்ளது. கிராம சபை கூட்டம், கொரோனா ஊரடங்கு காரணமாக நடக்காத நிலையில் கோட்ட அளவிலான கமிட்டிக்கு சிபாரிசு செய்ய இயலவில்லை. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒன்றியத் தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலை யில், கிராம சபை நடக்கவில்லை. மேலும் வன உரிமைக்குழு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே மறு குடியமர்வு பட்டியல் தயா ரிப்பது வன உரிமை சட்டத்திற்கு எதிரானது. வன விவசாயிகளுக்கு வன உரிமை சட்டப் படி பட்டா வழங்கவும், மறு குடியமர்வு விபர பட்டியல் தயாரிப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.