சிவகங்கை,டிச.16- சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பட்டு கிரா மத்தில் உள்ள மருதன் கண்மாய்க்கு தண்ணீர் வராததால் விவசாயம் பொய்த்துப் போகும் அபாயத்தில் உள்ள தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆறு முகம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் அளித்துள்ளார். மருதன் கண்மாயால் 400 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மணிமுத்தாறு ஆற்றில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருதன் கண்மாய்க்கு செல்கிற கால்வாய் தூர்ந்துகிடக்கிறது. மணிமுத்தாறு ஆற்றை விட கால்வாய் உயரமாக உள்ளது. இங்கு கட்டப் பட்டுள்ள தடுப்பணை உடைந்து அதன் வழியாகவும் தண்ணீர் வெளியேறி வீணாகிக் கொண்டிருக்கிறது என்று கிராம விவசாயி சுப்பிரமணியன் தெரி விக்கிறார். இதில் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு மருதன் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் . இப்பகுதியில் பெரும் பாலான கண்மாய் பாசனங்கள் விளைச் சல் ஏற்பட்டுள்ள நிலையில் இக் கண்மா யின் விவசாயம் மட்டும் பொய்த்துப் போகும் அபாயம் உள்ளது . விவசா யத்தை பாதுகாக்க உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகம் வலியுறுத்தினார்.