districts

img

கார்ப்பரேட்டுகளின் போலி மகளிர்தினம்

கே.பாலபாரதி வேதனை மதுரை, மார்ச் 9- கார்ப்பரேட்டுகளின் போலி மகளிர் தினம்  வேதனையளிக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு  மதுரை மாநகர் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் கலந்து கொண்டு அவர் பேசியதா வது: ஊதியமே இல்லாமல் வேலை வாங்க  முடியும் என்றால் அது பெண்ணாகளா கத்தான் இருக்க முடியும். தனியார் பள்ளி களில்  எம்எஸ்சி, எம்.எட் படித்த பெண்கள் வெறும் ரூ.7 ஆயிரம்  சம்பளத்திற்கு பணி யாற்றுகிறார்கள், பெரும் கார்ப்பரேட் மருத்து வமனைகள் நோயாளிகளிடம் லட்சம் லட்ச மாக பணம் சம்பாதிக்கின்றன. ஆனால், பணி யாற்றும் செவிலியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்குகிறது.  இன்றைக்கும் சில கார்ப்பரேட் நிறுவ னங்கள் தங்களுடைய அலுவலகங்களில் பெண்களுக்கு இனிப்புகளை வாங்கிக் கொடுத்து அவர்கள் உழைப்பை மலிவு விலையில் சுரண்டிக்கொண்டு மகளிர்  தினம் என்று கொண்டாடுகிறார்கள்.

சில  நகைக்கடைகள் மகளிர் தின வாழ்த்துக் களை கூறி இத்தனை பவுன் நகை வாங்கி னால் இத்தனை கிராம் நகை இலவசம் என்று  அறிவிக்கிறது. இப்படி பெண்களை ஒரு  போகப் பொருளாக சித்தரிப்பதை நிறுவ னங்கள் செய்து வருகின்றன.  பெண்களுக்கான உதவித்தொகை, பெண்களுக்கான இலவச அரிசி போன் றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப் பிரச்சனையை மதுரைக்கு வந்திருந்த குடி யரசுத் தலைவரை சந்தித்து தெரிவிக்கலாம் என நினைத்தபோது அவர், மதுரை மீனாட்சி  அம்மனை தரிசித்து விட்டு, கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவன்ராத்திரி விழாவுக்குச் சென்று விட்டார். ஆனால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பெயரைத் தாங்கியுள்ள மீனாட்சி பாட்டிக்குக் கூட  உதவித்தொகை கிடைக்கவில்லை. அரசுத்துறைகளில் பட்டம்படித்து முடித்த பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை. மாநகராட்சியில் கூட நிரந்தரப் பணி இல்லை. அவுட்சோர்சிங் முறையில் தான் ஆட்கள் எடுக்கப்படுகின்றனர்” என்றார். இந்தக் கூட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்க பெத்தானியாபுரம் பகுதிக்குழு செயலா ளர் பி. மல்லிகா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வை. ஜென்னி யம்மாள், சோக்கோ அறக்கட்டளை நிர்வாகி  செல்வ கோமதி, ஏக்தா அமைப்பு  அனிதா,  தீபம் மகளிர் மேம்பாட்டுக் குழு வெண்  ணிலா, கோவில் நிலங்களில் குடியிருப்போர் பாதுகாப்பு சங்க நிர்வாகி நிவேதா, தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைகள் கூட்டமைப்பு  நிர்வாகி பிரியா ஆகியோர் கருத்துரையாற்றி னர்.