எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மதுரை, ஜன. 20- கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 04, 11, 18, 25 ஆகிய சனிக்கிழமை களில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.40 மணிக்கு வேளாங் கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பிப்ரவரி 05, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள் ளது.
ஜன.24 கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர், ஜன.,20- விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக் கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்க ளில் ஜனவரி 24 அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இதில், சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் இக்கூட் டத்தில் கலந்து கொண்டு, தங்களது பொதுவான கோரிக் கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெற லாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரி வித்துள்ளார்.
போடியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்வைப்பு
தேனி ,ஜன.20- போடி நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு நகராட்சி அலுவ லர்கள் சீல் வைத்தனர் . நகராட்சிக்கு சொந்தமான சுமார் 39 கடைகள் கடந்த இரண்டு வருடமாக ரூ .39 லட்சம் வரை பாக்கி வைத்துள் ளன.நகராட்சி அலுவலர்கள் பலமுறை வலியுறுத்தியும் வாடகை செலுத்தவில்லை. இதனால் நகராட்சி பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தது . இந்நிலையில் நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி , கமிஷனர் (பொ) பொறியாளர் செல்வராணி ஆகியோரின் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ராஜ்கபூர் தலைமையில் முதற்கட்டமாக வாடகை செலுத்தாத 7 கடைகளை சீல் வைத்தனர் .மீதமுள்ள 32 கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது,
சிவகங்கை: 23 மையங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
சிவகங்கை, ஜன.20- சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் சார்பாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் மேம்பத்தூர், சோழபுரம், தமராக்கி தெற்கு, ஆகிய பகுதிகளிலும் மானா மதுரை ஊராட்சி ஒன்றியத்தில் சின்ன கண்ணனூர், முத்தனேந்தல், மிளகனுர், விளத்தூர், கட்டிக்குளம் ஆகிய பகுதிகளிலும், காளையார் கோவில் ஊராட்சி ஒன்றி யத்தில் புல்லுக்கோட்டை, சாத்திரசன்கோட்டை ஆகிய பகுதிகளிலும், திருபுவனம் ஊராட்சி ஒன்றியத்தில் தஞ்சாக்கூர் ,திருப்பாச்சேத்தி, முதுகுவன் திடல் ,பிரமனூர், கீழராங்கியம், ஏனாதி ஆகிய பகுதிகளிலும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கீழ்நெட்டூர், முனைவென்றி ,தாயமங்கலம் ஆகிய பகுதிகளிலும் ,கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் எஸ் .ஆர் .பட்டினம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நெற்குப்பை, காவனூர், திருக்கோஷ்டியூர் ஆகிய பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன் உடல் எரிப்பு தந்தை மீது வழக்குபதிவு
கடமலைக்குண்டு,ஜன.20- தேனி மாவட்டம், வருசநாடு அருகே கோரையூத்து கிரா மத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் நித்திஸ் (வயது 8). இதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தான். மகேந்திரனுக்கு இதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. கடந்த 18 ஆம் தேதி புதன்கிழமை தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த நித்திஸ் அங்கிருந்த டிவியை ஆன் செய்வதற்காக சுவிட்சை போட முயன்றுள்ளார். அப்போது டிவிக்கு அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த மின்சார வயரை நித்திஷ் எதிர்பாராத விதமாக தொட்டுவிட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதை கண்டு அதிர்ச்சி யடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் நித்திஸ் உடலை மயானத்தில் எரித்து விட்டனர். இந்த சம்பவம் அறிந்த மேகமலை கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் கோரை யூத்து கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்பு இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மகேந்திரன் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராஜபாளையம் அரசு மருத்துவமனை மேம்பாட்டுப்பணியை உடனே துவக்க கோரிக்கை
இராஜபாளையம்,ஜன.20- இராஜபாளையம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக உள்ளது. இம் மருத்து வமனை மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ராஜபாளையம் நகர மக்களும், சுற்றியுள்ள 30-க்கும் மேற் பட்ட கிராம மக்களும் பயன்பெற்று வரு கின்றனர். மருத்துவமனையில் போதிய இட வசதி இன்றி நோயாளிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவ மனைக்கு இணையான நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.34.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் மேம்படுத்துதல் பணியை விரைவில் தொடக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு 2 மாத கூலியை உடனே வழங்கிடுக! விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
மதுரை,ஜன.20- 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்க ளுக்கு 2 மாத கூலியை உடனே வழங்க வேண்டும் என்று விவசாயத்தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஜெ.காசி, மாவட்ட செயலாளர் வி.உமாமகேஸ்வரன் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், திருப்ப ரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டு 420 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்க வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும். கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்க ளாக மதுரை மாவட்டம் முழுவதும், 100 நாள் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு கூலி வழங்காமல் தொழிலாளர்களை ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அலைக்கழித்து வருகின்றது. இது குறித்து மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட அதிகாரி கவனத் தில்கொண்டு, இரண்டு மாதமாக நிலு வையில் உள்ள ஊதியத்தை உடனடியாக தொழிலாளர்களுக்கு வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும். விரைவில் நட வடிக்கை எடுக்காவிட்டால் தொழிலாளர்க ளை திரட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நடிகர் வடிவேலுவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி.,ஆறுதல்
மதுரை, ஜன. 20- திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் புதனன்று காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் நடிகர் வடிவேலுவை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் குடும் பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
100 நாள் வேலையில் 3 மாதங்களாக கூலி தரவில்லை கிராமப்பெண்கள் சிபிஎம் கட்சியினரிடம் புகார்
சிவகங்கை, ஜன.20- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மேலப்பிடாவூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு கடந்து மூன்று மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கிராமப்புற பெண்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தெரிவித்தனர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராம லிங்க பூபதி ,ஒன்றியச் செயலாளர் ஆண்டி மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் மேலப்பிடாவூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினர். அப்போது, கிராம மக்கள், பெண்கள் கட்சியின் பொறுப்பாளர்களிடம் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கூறினர். அவர்கள் கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த கடந்த மூன்று மாத காலத்திற்கு கூலி வழங்கவில்லை என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியிடம் கட்சியினர் பேசும்போது அவர் கூறுகை யில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி அனைத்தும் தமிழக அரசுக்கு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
மதுரை,திருச்சி,தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்கக் கோரி வழக்கு
அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜன.20- மதுரை,திருச்சி,தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய், எச்ஐவி மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்த சகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அவர் தாக்கல் செய்த மனுவில், “2021-இல் முத்துக் குமார், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கட்டிட வேலையில் ஈடுபடும் பொழுது காலில் காயம் ஏற் பட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும் அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த போது காலில் மிகுந்த வலி ஏற்பட்டதாக கூறி இறுதியில் மரணம் அடைந்தார். இதுபோன்று புற்றுநோய், எச்ஐவி மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் தருவாயில் அதிக மான வலிகள் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். புற்றுநோய், எச்ஐவி மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இறக்கும் தருவாயில் அதிகமான வலிகள் ஏற்படாத வண்ணம் பல தனியார் மருத்துவமனைகளில் வலி நிவாரணி சிறப்பு மையங்கள், வலி நிவாரணி மருந்துகள் ஆகியவை உள்ளன. இதை போல் வலி நிவாரணி சிறப்பு மையங்களை அரசு மருத்துவமனையில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேவை யான வலி நிவாரணி மருந்துகளும், பணியாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை, பாலரங்கா புரம் அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் புற்று நோய், எச்ஐவி மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ண குமார், விஜயகுமார் அமர்வு முன்பு வெள்ளியன்று நடை பெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், வழக்கு குறித்து சுகாதாரம் - குடும்ப நலத்துறை முதன்மைச் செய லர், மருத்துவக் கல்வியல் துறை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.மேலும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
வேலை கேட்ட பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி
தேனி, ஜன.20- வேலை கேட்டு விண்ணப் பித்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்யப் பட்டது குறித்து தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டியைச் சேர்ந்தவர் மைக்கேல் மகள் அருள் ஆரோக்கிய செபாஸ்டின். இவர், யூ டியூப் சமூக வலைத்தள விளம்பரத்தின் மூலம் தூத்துக்குடியில் சேவி யர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் கண்டெய்னர் மூலம் கப்பலில் சரக்கு ஏற்றும் நிறுவனம் செயல் பட்டு வருவதாக தெரிந்து கொண்டார். அந்த நிறுவ னத்தில் நிர்வாக உதவியா ளர் பணிக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பித் துள்ளார். இதையடுத்து, செல் போனில் வினோதினி என்ற பெயரில் பெண் ஒருவர் தொ டர்பு கொண்டு, அருள் ஆரோக்கிய செபாஸ்டினு க்கு வேலை தருவதாக உறு தியளித்தார். பின்னர் மீண்டும் செல்போனில் பேசிய வினோதினி, தூத் துக்குடியில் கண்டெய்னரில் வரும் பொருள்களை கப்ப லில் ஏற்ற வேண்டு. கப்ப லில் பொருள்களை ஏற்றிய தும் பணம் திரும்பக் கிடைத்து விடும் என்று கூறி யுள்ளார். இதை நம்பிய அருள் ஆரோக்கிய செபாஸ்டின், 2021 ஆம் ஆண்டு வினோ தினி மற்றும் அவர் கூறிய நபரான முகமது பைசல் ஆகியோருக்கு மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்தை அனுப்பினார். இந்நிலையில், கொடுத்த பணத்தை திரும்பத் தராமல் மோசடி செய்துவிட்டதாக வினோதினி, முகமது பைசல் ஆகியோர் மீது தேனி சைபர் கிரைம் பிரிவில் அருள் ஆரோக்கிய செபாஸ்டின் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்களை அவதிக்குள்ளாக்கும் இராஜபாளையம் நகராட்சி ஆணையரின் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
இராஜபாளையம், ஜன.20- மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் நகரச் செயலாளர் மாரி யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராஜபாளையம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி துவங்க இருப்பதாகவும் அதற்காக ஜனவரி 20 ஆம் தேதி முதல் பழைய பேருந்து நிலையம் செயல்படாது எனவும், மாற்று வழித்தடங்கள் குறித்து நகராட்சி ஆணையரும் காவல்துறையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இராஜபாளையம் நகராட்சி ரயில்வே மேம்பால பணி, பாதாள சாக்கடைத்திட்ட பணி, தாமிரபரணி குடிநீர் திட்ட பணி ஆகிய திட்டங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் மிகுந்த துன்பங்களை அனு பவித்து வருகின்றனர். ரயில்வே மேம் பால பணி ஐந்தாண்டுகளாக நிறைவு பெறா மல் இருப்பதை ஒட்டி தென்காசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையா ளரின் அறிவிப்பும் காவல்துறையின் அறி விப்பும் பொருத்தமற்றதாக இருப்பதோடு மக்களை மேலும் துன்பப்படுத்துவதாக உள்ளது. எனவே சத்திரப்பட்டி சாலையில் நடை பெற்று வரும் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பேருந்து நிலைய புதுப்பிக்கும் பணியை துவங்கக்கூடாது.மீறி செயல் படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.