சிவகாசி, மே 18- சிவகாசி அருகே ஊராம்பட்டியில் தனி யார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது ஊராம்பட்டி. இங்கு கடற்கரை என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சென்னை உரிமை பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பூத்தொட்டி பட்டா சுக்கான ரசாயன கலவை செலுத்தும் பணி யில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருளாயி, ஐய்யம் மாள், சுந்தர்ராஜன், குமரேசன் ஆகிய நான்கு தொழிலாளர்கள் பலத்த தீக் காயம் அடைந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சுந்தரரேசன், குமரேசன், மற்றும் ஐயம்மாள் ஆகிய மூன்று பேரும் உயிரி ழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாரனேரி காவல்துறையினர் ,விபத்துக் கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலை உரிமையா ளர் கடற்கரை மற்றும் போர் மேன் காளி யப்பன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதோடு காளியப்பனை கைது செய்தனர்.