districts

img

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

சாத்துர், மே 4- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி. இங்கு, சிவகாசி யை சேர்ந்த பெரிய கருப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்ற னர். இந்நிலையில், ஆலை திறந்த வுடன் பட்டாசு தயாரிக்க பயன்  படும் வேதிப் பொருட்களை கலக் கும் பணியில் 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வித மாக திடீரென உராய்வு காரண மாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன கலவை பணி யில் இருந்த சுந்தரகுடும்பன்பட்டி யைச் சேர்ந்த சோலை விக் னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயி ரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஒரு அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.  தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல  மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து, ஆலை உரிமையாளர் பெரிய கருப்பன் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிர் இழப்பை ஏற்  படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து  அம்மாபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். சிஐடியு முயற்சியால் ரூ.5.50 லட்சம் இழப்பீடு பாதிக்கப்பட்ட குடும்பத்தி னரை சிஐடியு பட்டாசு தீப் பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி. பாண்டியன், வழக்கறிஞர் வி.ஏ. விஸ்வநாத், சிஐடியு நிர்வாகி மனோஜ்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரி வித்தனர். பின்பு, ஆலை நிர்வாகம் மற்றும் வட்டாட்சியருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். முடிவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ. 50 ஆயிரம் இறுதிச் சடங்கிற்கு தர ஒப்புக் கொண்டனர்.