districts

img

செம்பட்டி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து

சின்னாளபட்டி, ஜன.17- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி  கண்மாய் பகுதியில் பட்டாசு கடை இருந்தது.  கடை யின் மேல்புறம் இருந்த வீட்டில் பட்டாசு கடையின்  உரி மையாளர்கள் ஜெயராம், அவரது மனைவி நாகராணி குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இந்நிலையில் ஜன வரி 17 செவ்வாயன்று  மாலை கடையில் திடீரென்று பட்டா சுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் கடையை ஒட்டியிருந்த வணிக வளாகம் மற்றும்  கடை உரிமை யாளரின் வீடு இடிந்தது.  கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள், 2 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இடிபாடு களுக்குள் கடையின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் நாகராணி உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.