திருவனந்தபுரம், மே 22- மாற்றுத்திறனாளிகள் துறையில் சிறந்து விளங்கும் கேரளாவுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகா ரம் அளித்துள்ளது. மாற்றுத்திறனா ளிகளுக்கான உதவி சாதனங்க ளின் தேவை மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் பணியில் நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் தொடங்கியுள்ள பயிற்சித் திட்டத்திற்கு (Training in Assistive Products - TAP) பயிற்சி யாளர்களாக இவர்கள் செயல்படு வார்கள். தேசிய உடல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு நிறுவனத்தின் (NIPMAR) நிபுணர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் உதவி உபகரணங்கள் திட்டத்தை வழங்கும் டிஏபி செயல்படுத்துவதில் நிப்மரின் நிபுணர்கள் ஈடுபடு வார்கள். இத்திட்டத்தின் முதற் கட்டம் கிராம பஞ்சாயத்து அளவில் சுகா தார பணியாளர்களுக்கு உதவி சாத னங்களின் தேவை குறித்து பயிற்சி அளிப்பது ஆகும். இதற்காக, நிப்மரின் நிபுணர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ) உதவியில் மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும். பின்னர் அங் கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார பணியாளர்கள் மற்றும் நோய்த்தடுப்பு செவிலி யர்கள் போன்ற கிராம அளவிலான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி பெற்ற கிராம அளவிலான ஆர்வலர்களின் சேவையைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள், இத்திட்டத்தில் வய தானவர்கள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு உதவி சாத னங்கள் விநியோகிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் துறையில் அதன் பணியின் காரணமாக, நாட்டி லேயே முதல் முறையாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த, நிப்மரை பயன்படுத்த உலக சுகாதார நிறு வனம் முடிவு செய்தது. உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து உதவி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுக்கு நிப்மர் அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக திருச்சூர் மாவட்டத் தில் உள்ள ஆலூர் கிராம பஞ்சா யத்தில் இருந்து இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்படு வார்கள். நிப்மர் உடனான உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்து ழைப்பு, மாற்றுத்திறனாளிகள் மறு வாழ்வுத் துறையில் மாநில அரசு மற்றும் சமூக நீதித் துறை செய்த பணிக்கான சர்வதேச அங்கீகார மாகும்.