மதுரை, ஜன.22- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் புதூர் - அண்ணா நகர் பகு திக்குழுவின் காந்திபுரம் கிளை சார்பில் புதூர் காந்திபுரம் பாண்டியன் நகர் பகுதி யில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பகுதிக்குழு தலைவர் டி. சதீஷ்குமார் தலைமை வகித்தார். விழா வில் திருக்குறள் போட்டி, இசை நாற்காலி, கவிதை போட்டி, நடன போட்டி என்று பல் வேறு விளையாட்டு போட்டிகள் நடை பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற குழந் தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதுரை மாநகர துணை மேயர் டி. நாகராஜன், 23 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் டி. குமரவேல், திமுக 12 வது வார்டு செயலாளர் பி.எம்.மருது, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. செல்வராஜ் பொரு ளாளர் அ. பாவல் சிந்தன், துணைத் தலை வர் எஸ். வேல்தேவா, பகுதிக்குழு செய லாளர் எம். யாசர் அராபத், பொருளாளர் ஐ. ரஜாக், துணைத் தலைவர் எஸ். சரவணன் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பேசினர்.