மதுரை, மார்ச் 16- சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணியிடத்தில் பெண் களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் சட்ட மன்றங்களில் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் சிஐடியு மதுரை மாவட்டக்குழு அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜெ. லூர்துரூபி தலைமை வகித்தார். சிஐ டியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டி பாபு கருத்துரையாற்றினார். மாதர் சங்க மாநில செயலாளர் ஆர். சசிகலா, சிஐ டியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், உழைக்கும் பெண்கள் (எல்ஐசி) விஜயா, ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செய லாளர் வை .ஜென்னியம்மாள், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. செல்வ ராஜ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் க. பாலமுருகன் ஆகியோர் உரையாற்றினர். தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.