districts

img

திருவில்லிபுத்தூர் பேருந்து நிலைய பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவில்லிபுத்தூர், ஆக.9- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அண்ணா  பேருந்து நிலையத்தைச் சுற்றி கடை வைத்திருப்போர் தங்களது கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை செய்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடை யூறு செய்து வருவதாக திரு வில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.  இதனடிப்படையில் நக ராட்சி நிர்வாகம் சார்பில் நகர்  காவல் துறை பாதுகாப்பு டன் ஆக்கிரமிப்பு அகற்றப்  பட்டது. இதில் நகராட்சி  ஆணையாளர் ராஜமாணிக் கம், காவல் ஆய்வாளர் நாக ராஜன் போக்குவரத்து சார்பு  ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடு பட்டனர்.போலீஸ் டிஎஸ்பி  முகேஷ்க்குமார் தலைமை யில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது. பல கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்பு களை தாங்களாகவே முன் வந்து அப்புறப்படுத்தினர். சில வியாபாரிகள் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.