திருநெல்வேலி, ஜூலை 29- தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட 4ஆவது மாநாடு பாளை யங்கோட்டையில் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் பத்மநாதன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் பேராச்சி வரவேற்று பேசி னார். மாநில செயலாளர் ஆறுமுகம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் அறிக்கையை சங்க மாவட்ட செயலாளர் குமாரசாமி சமர்ப்பித்து பேசினார். பொருளாளர் அறிக்கையை மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன் சமர்ப்பித்து பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வீ.பார்த்தசாரதி, தமிழ்நாடு அரசு அனைத்து சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கோமதிநாயகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்டத் தலைவராக குமார சாமி, மாவட்டச் செயலாளராக கோமதி நாயகம், மாவட்டப் பொருளாளராக பேராச்சி, மாவட்ட துணைத் தலை வர்களாக வைகுண்டமணி, முத்து கிருஷ்ணன், அபூபக்கர், மாவட்ட இணை செயலாளர்களாக பால சுப்பி ரமணியம், முருகன், பத்மநாபன், ராஜேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கல்வி உதவித் தொகை மாநாட்டில் மாவட்ட துணை தலைவர் வைகுண்ட மணி அவரின் துணைவியாரின் நினைவாக நலிந்த தொழிலாளர்களின் அதிக மதிப் பெண் பெற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக தலா ரூ.1000 வீதம் ரூ.7ஆயிரம் வழங்கினார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதி யர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்க ளுக்கும் 10சதவீதம் கூடுதல் ஓய்வூதி யம் வழங்க வேண்டும், 1-1-2022முதல் வழங்கப்பட வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும், முடக்கப்பட்ட 21 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் ,நெல்லை சந்திப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஜங்ஷன் பேருந்து நிலையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநில துணைத்தலை வர் குப்பன் நிறைவுறையாற்றினார், இணை செயலாளர் முருகன் நன்றி கூறினார் மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.