மதுரை, ஜூலை 24- மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங் கட்சியினர் மற்றும் வியாபாரிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத்தொழிலாளர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக்கழகம் பொதுத்தொழிலாளர் சங்க (சிஐடியு) மதுரை மண்டல பொதுக்குழு (பேரவை) கூட்டம் மதுரை சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத் திற்கு மண்டல தலைவர் கே.கதிரேசப் பாண்டியன் தலைமை வகித்தார். மாநி லப் பொதுச் செயலாளர் ஆர். புவனேஸ் வரன் ,மண்டல செயலாளர் எம்.அழகு லட்சுமணன், மண்டல பொருளாளர் ஆர்.பாஸ்கரன், மாநில பொருளாளர் எம்.எழுமலை, மாநிலத் துணைத் தலைவர்கள் கே.சண்முகம், கே.சுப்பு ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் ரேசன் அங்காடிகளை கூட்டுறவுத்துறைக்கு மாற்ற முயற்சிப்பதை கைவிட வேண் டும். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை தற் போது நடைமுறையில் உள்ள 12(பி) ஒப்பந்தத்தின் மூலமாக பருவ கால பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மதுரை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் ஆளும் கட்சியினர் மற்றும் விவசாயிகள் என்ற பெயரில் வியாபாரிகள் தலையிடு வதை அரசு தடுக்க வேண்டும். நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் சுமைப்பணி தொழிலாளர் பணியிடங் களை தற்போது உள்ள நடைமுறைப் படி நிர்வாகமே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும். தற்போது நிர்வா கம் அறிவித்துள்ள அவுட்சோர்சிங் (ஒப் பந்த அடிப்படையில்) போடும் திட் டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அரசு அரவை ஆலையினை தனியாரி டம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.