districts

img

20 சதவீத போனஸ் கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி அக் 26- மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக்கோரி தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பாக மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பாளை யங்கோட்டை மகாராஜா நகர் மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. 10 சதவீத போனஸ் அறிவிப்பை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும், அதிகாரிகள் பணி யாளர்கள் தொழிலாளர்கள் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் வண்ணமுத்து தலைமை தாங்கினார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் பீர்முகம்மது ஷா, திட்ட செய லாளர் கந்தசாமி, டி.என்.இ.பி.டி.பி. ஏ.எஸ். மாநிலச் செயலாளர் மயி லேறும் பெருமாள், ஏ.இ.எஸ்யு மண்டலச் செயலாளர் ஐயம்பெரு மாள், டி.என்.இ.பி.டி.பி.ஏ.எஸ் திட்ட செயலாளர் மாதவன், டி.என். இ.பி.இ.எஸ். திட்ட செயலாளர் இசக்கி பாண்டி, மண்டல செயலாளர் மணிவாசகம், டி.என்.இ.பி.இ.எப். மாநில துணைத் தலைவர் முத்தை யா திட்ட செயலாளர் பாலசுப்பிரமணி யன், மின்வாரிய அம்பேத்கர் யூனியன் சங்க மாநில துணைத் தலை வர் சிவகுமார் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் அர்ஜுனன், முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.