districts

img

ஊதிய உயர்வு வழங்கிடுக-காலிப்பணியிடங்களை நிரப்பிடுக: மதுரையில் மின் ஊழியர்கள் வாயிற்கூட்டம்

மதுரை,  ஜூலை 15-  01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகை யுடன் உடனே வழங்க வேண்டும். பஞ்சப்படி உள்ளிட்ட 23 சலுகைகளை பறிக்கும் வாரிய ஆணையை  ரத்து செய்திட வேண்டும். 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ள சரண்டர் விடுப்பை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி  தமிழ்நாடு மின் ஊழியர் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் வெள்ளியன்று மதுரையில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.   அரசரடி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு பொ றியாளர் ஐக்கிய சங்க தலைவர் சகாய ராஜ் தலைமை வகித்தார். ஒர்க்கர் பெட ரேஷன் நிர்வாகி தமிழ்ச் செல்வன், அண்ணா தொழிற் சங்க நிர்வாகி புகழேந்தி ஆகியோர் பேசினர். தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மாவட்டச் செயலாளர் அறி வழகன் சிறப்புரையாற்றினார்.