தேனி, மார்ச்.4- தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பேரூ ராட்சி துணைத்தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.சுருளிவேல் தேர்வு செய்யப்பட்டார். பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட இ.லட்சமி போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.சுருளிவேல் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக ஒன்றிய செயலாளர் குமரன், பேரூர் செயலாளர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.வேலவன், ஒன்றிய செய லாளர் டி.ராஜா, மாதர் சங்க தலைவர் சித்ரா, வாலிபர் சங்க தலைவர் ராஜா உள்ளிட டோர் பேரூராட்சி தலைவர் இ.லட்சுமி, துணைத்தலைவர் எஸ்.சுருளிவேல் ஆகி யோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.