இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் விசைத்தறித் தொழிலாளர்களுக்குப் பதினெட்டு மாதங்களாகக் கூலி உயர்வு வழங்காததைக் கண்டித்தும், 75 சதவீத ஊதிய வழங்க வலியுறுத்தியும் விசைத்தறி தொழிலாளர்கள் செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தளவாய்புரத்தில் மட்டும் 600 விசைத்தறிகள் இயங்குகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.