ஒட்டன்சத்திரம், மே 16 - திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு முகாம் மே 16 செவ்வாய்க்கிழ மையன்று நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ண ராஜா தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்து பேசினார். மேலும் டெங்கு சம்பந்தமான சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது இதில் சுகாதார ஆய்வாளர் ரவி, செவிலியர்கள், சுகா தார பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுப்பேசினர். இம்முகாமில் இடையகோட்டை, சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூர் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி யாகும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கக் கூடிய வகையில் நகராட்சி நுழைவாயில் முன்பாக திருவில்லி புத்தூர் நகராட்சி சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலர் என்.ராமச்சந்திரன் தலைமை யில் டெங்கு ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி .சரவ ணன், சுகாதார மேற்பார்வையாளர் ஜான் அலெக் சாண்டர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.