போதை தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி
திருநெல்வேலி, ஜூலை 8- நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி-கருத்த ரங்கம் பாளை ஆயுதப்படை வளாகத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. கண்காட்சியை நெல்லை சரகய போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட எஸ்.பி.சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவ-மாணவிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சுமார் 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறு வனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரங்குகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர். நிகழ்ச்சி தொடர்பாக ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி யில் பேச்சுப் போட்டியில் 46 பேரும், ஓவியப் போட்டியில் 384 பேரும் கலந்து கொண்டனர். அவர்களில் சிறப்பாக பேசியவர்கள் மற்றும் சிறந்த ஓவியம் வரைந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
சுதந்திர தின கால்பந்து போட்டி
நாகர்கோவில், ஜூலை 8 இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை சுதந்திர திருநாள் அமுதப் பெரு விழாவாக (Azadi ka Amrit Mahotsav) கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக சுதந்திர தின அமு தப்பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 16.07.2022 ,17.07.2022 ஆகிய இரு நாட்கள் அரசு தொழில் பயிற்சி நிறுவன விளையாட்டு மைதானத்தில் சுற்றுலாதுறை மற்றும் அரசு தொழில் பயிற்சி நிறுவன கால்பந்து கிளப் இணைந்து கால்பந்து போட்டி நடத்த உள்ளன. இதில் பங்கு பெற விருப்பம் உள்ள கால்பந்து அணியினர் சுற்றுலாத்துறை கன்னியாகுமரி அலுவ லகத்தையோ அல்லது சுற்றுலா அலுவலர் தொலைபேசி எண் (9176995866)ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும் படி கேட்டுகொள்கிறோம். இது 75வது சுதந்திர அமுதப்பெருவிழா மற்றும் காம ராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இரு பெரும் விழாவாக கால்பந்து போட்டி நடத்தப்படுகின்றது. அனைத்து இளை ஞர்களும்இதில் பங்குபெறும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி திட்டங்கள் புகார் தொலைபேசி எண் சுவரொட்டி வெளியீடு
திருநெல்வேலி, ஜூலை 8- நெல்லை மாவட்ட ஆட்சியரால் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான கையேடு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான புகார் தொலைபேசி எண் குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப் பட்ட திட்ட கையேட்டினை பயனாளிகளுக்கு வழங்கியும், ஊரக குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 89254 22215 மற்றும் 89254 22216 ஆகிய தொலைபேசி எண் குறித்த சுவ ரொட்டியினை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டார். மேலும் பொதுமக்கள் இதனை பயன் படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சுவரொட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
கையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது
தூத்துக்குடி, ஜூலை 8 தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வை யில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வா ளர் (பொறுப்பு) முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் வியாழனன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தெற்கு ரதவீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அல், அவர் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுயம்பு மகன் சத்யராஜ் (27) என்ப தும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்க ளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் சத்தியராஜை கைது செய்து அவரிட மிருந்த ரூ.18ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச் செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி, ஜூலை 8 தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) 1057 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 31ஆவது மெகா தடுப்பூசி முகாமுக்கு 10.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மொத் தம் 1057 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங் கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் 1057 முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 120 சிறப்பு முகாம்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 937 இடங்களிலும் தகுதி யான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்து வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களில் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளலாம். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள லாம். தடுப்பூசி மையங்களில் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய்த் துறை, ஊரக மற்றும் மாநக ராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்து ணவுப்பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, கல்வித் துறை, தன்னார்வலர்கள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்துவதற்கு புகைப் படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண் கொண்டு வந்து பதிவு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி உயிரிழப்பைத் தவிர்க்கு மாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் புதிதாக 73 பேருக்கு கொரோனா
திருநெல்வேலி, ஜூலை 8- நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வியாழ னன்று 93 ஆக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 73 ஆக சரிந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மாநகர பகுதியில் 18 பேரும், அம்பை, களக்காடு, வள்ளி யூர் பகுதியில் தலா 10 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். பாளையில் 9 பேர், நாங்குநேரியில் 7 பேர், மானூர், ராதாபுரத்தில் தலா 3 பேர், சேரன்மகா தேவி யில் 2 பேர், பாப்பாக் குடியில் ஒருவருக்கு தொற்று கண் டறியப்பட் டுள்ளது. இவர்க ளில் பெரும்பாலானோர் வீட்டு தனிமை யிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் கள்.
திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருசாபிஷேகம்
தூத்துக்குடி, ஜூலை 8 திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா கோலாகலமாக நடை பெற்றது. விழாவில், திருச்செந் தூர் கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், கோ வில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் உள் துறை கண்காணிப்பாளர் ராஜேந்தின், தக்கார் பிரதி நிதி டாக்டர் பாலசுப்பிர மணிய ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ழித்துறையில் குடிநீர் விநியோகம் பாதிப்பு பொதுமக்கள், நகராட்சி உறுப்பினர்கள் முற்றுகை
நாகர்கோவில், ஜூலை 8- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கல்பாலத்தடி பகுதியில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது அந்த பகுதியில் உள்ள பழைய குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் விநியோ கம் பாதிக்கப்பட்டது. பின்னர் அதனை உடனடியாக சீர மைக்கும்படி குழித்துறை நகராட்சி சார்பில் குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து குழித்துறை குடிநீர் வடிகால் வாரிய என்ஜினீயர் ஹரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதனை அறிந்த குழித்துறை நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்களுடன் சென்று அதிகாரிகளை முற்றுகை யிட்டனர். பின்னர் சேதமடைந்த குடிநீர் குழாயை சீர மைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரரை வரவழைத்து சீரமைக்கும் பணி நடந்தால் போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது.
கௌதாரி வேட்டை : 2 பேர் கைது
தூத்துக்குடி, ஜூலை 8 விளாத்திகுளம் அருகே கௌதாரியை வேட்டையா டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 2 துப்பாக்கி கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த முருகன், பி அன் டி காலனியை சேர்ந்த அசோக் ஆகிய இருவரும் சிவில் இன்ஜினியர்கள். நண்பர்களான இருவரும் வியாழ னன்று குளத்தூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரசன் குளம் பகுதி காட்டுக்குள்ளே காட்டு பறவையான கௌதா ரியை துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருவதாக குளத்தூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குளத்தூர் காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முருகன் மற்றும் அசோக் இருவரும் துப்பாக்கியால் கௌதாரிகளை வேட்டையாடி காரில் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதையெடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கி, சுடப்பட்ட 7 கௌதாரிகள் ஆகிய வறை பறிமுதல் செய்து விளாத்திகுளம் வனச்சரக அலு வலகத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வனச் சரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இருவருக்கும் ரூ.25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
எலக்ட்ரானி்க் தராசில் எடைபோட்டு கஞ்சா விற்ற வாலிபர் கைது!
தூத்துக்குடி, ஜூலை 8 புதூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து எலக்ட்ரானிக் தராசு மற்றும் ரூ.23,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமை யிலான போலீசார் வியாழனன்று புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் - அருப்புக்கோட்டை ரோடு பகுதி யில் சுப்புலாபுரம் விலக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் விளாத்திகுளம் மகாராஜாபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் பொன்ராஜ் (21) என்பதும் அவர் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் பொன்ராஜை கைது செய்து அவரிட மிருந்த 10 கிராம் கஞ்சா, எலக்ட்ரானிக் தராசு மற்றும் ரூ.23,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாய கம் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
குமரியில் மின் தடை
நாகர்கோவில், ஜூலை 08 கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதையொட்டி ஜூலை 9 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை காவல் கிணறு மின் நிலையத்தில் இருந்து கண்ணுபொத்தை காலணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. வருகிற 11-ந் தேதி கன்னியாகுமரி மின் வினியோ கத்தில் இருந்து கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, கீழமணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை யும், பார்வதி புரத்தில் சிவபுரம், களியங்காடு, ஆரம்பாறை, கணியாகுளம், இலந்தையடி, பாறையடி, பண்டாரதோப்பு, உழ வன் கோணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. வல்லன்குமாரன்விளை மின்வினியோக நிலை யத்தில், இருந்து வருகிற 12-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வல்லன்குமாரன்விளை மற்றும் தடிக்கா ரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உப மின் நிலை யங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் மற்றும் நாகர்கோவில் பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம். எஸ். ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே. பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன்நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. பார்வதிபுரம் மின் நிலையத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வதிபுரம் சானல்கரை ரோடு, எஸ். எஸ். நகர், கிறிஸ்டோ பர் நகர், பெருவிளை, கே. பி. ரோடு, அருள்மாதா தெரு, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. வருகிற 14-ந் தேதி வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் பாக்யாதெரு, ராஜா தெரு, ஆன்றனி தெரு, வாட்டர் டேங்க் ரோடு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
முதன்முறையாக தமிழில் அச்சடித்த அஞ்சல் பைகள் விநியோகம் மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., வாழ்த்து
மதுரை, ஜூலை 8- மதுரை அஞ்சல் கோட்டங்க ளில் முதன்முறையாக தமிழ் மொழி எழுத்துக்கள் அச்ச டிக்கப்பட்ட அஞ்சல்பைகள் விநியோகம் செய்த மதுரை தலைமை அஞ்சலகஅதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வாழ்த்துக்களை தெரிவித் துள்ளார். ஒன்றிய பாஜக அரசு பல் வேறு துறைகளில் ஹிந்தி மொழியை திணிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங்கடேசன் எதிர்த்து, கண்டித்து வருகிறார். வங்கி, தபால் நிலையங்களில் வழங்கப்படும் விண்ணப்பங்க ளில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்று தொடர்ச்சி யாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் மதுரையில் உள்ள 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் முதன் முறையாக தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட பைகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை கோட்ட அஞ் சல் பொருள் கூடத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, 33 அஞ்சல் கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தபால் பைகளில் அலுவல் மொழி களான ஆங்கிலம், இந்தி மொழி களே இதுவரை ஒன்றிய அரசுத் துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சுதந்திரத்து க்குப் பிறகான 75 ஆண்டுகளில் மதுரை அஞ்சலக அதிகாரியின் முயற்சியால் முதன முறையாக தமிழ் மொழியில் வார்த்தைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள் ளது. இதற்கான முயற்சிகளை மேற் கொண்ட மதுரை தலைமை அஞ்சலக அதிகாரிக்கு வாழ்த்து கள்’ என்று தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசனின் இந்த பதி வுக்கு தமிழ்மொழி ஆர்வலர் கள் வாழ்த்துகளையும், மகிழ்ச்சி யையும் தெரிவித்து வருகின்ற னர்.