டிப்பர் லாரி மோதியதில் அரசு ஜீப் ஓட்டுநர் பலி பிடிஓ படுகாயம்
தேனி, ஏப்.12- போடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அரசு வாகன ஓட்டுநர் உயிரிழந்தார் .வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேனி ரத்தினம்நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்த வர் முகமது ஷெரீப்(49). இவர் போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.புதன்கிழமை காலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஞான திருப்பதியை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு தேனியில் இருந்து போடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.தோப்புப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஜீப் மீது மோதியது. இதில் அதே இடத்தில் முகமது ஷெரீப் உயிரிழந்தார். காயமடைந்த ஞான திருப்பதி தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். லாரி ஓட்டுநர் பிரின்ஸ் சக்கரவர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளர் ஈஸ்வரன் விசாரித்து வருகிறார் .
ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதியில் பறந்த விமானம்
ஒட்டன்சத்திரம், ஏப்.13- ஒட்டன்சத்திரம் அருகே மலைப்பகுதிக்கு மேல் விமா னம் பறந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. ஏப்ரல் 12 காலை 10.20 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து இடையக்கோட்டை மலைப்பகுதிக்கு மேல் கரூர் நோக்கி அதிக சத்தத்துடன் ஒரு விமானம் பறந்து சென்றது. இந்த சத்தத்தை கேட்டு பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பதற்றத்துடன் பார்த்தனர். இப்பகு தியில் விமானம் பறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். வேடசந்தூர் அருகே உள்ள தேவிநாயக்கன்பட்டி அருகே உள்ள கருமலை மற்றும் ரெங்கமலை பகுதி யில் இந்திய நில அறிவியியல் துறை அதிகாரிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினர். இதில் பூமிக்கடி யில் பாறைகளில் தங்கம், செம்பு, காப்பர், துத்தநாகம், காரியம் உள்ளிட்ட 7 வகையான கனிமவளங்கள் வேர் போல கற்களுடன் பரவிச் செல்வதாக கூறப்பட்டது. இந்த கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்காக கரு மலை முதல் ரெங்கமலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையைச்சுற்றி தொடர்ந்து ஆய்வு நடத்தி அதில் இரு மலைகளுக்கு இடையே உள்ள பட்டா விவசாய நிலங்க ளில் பாறை ஓட்டத்தின் அடையாளத்தை குறிக்கும் வகை யில் 500 மீட்டருக்கு ஒரு அடையான கற்கள் ஊன்றி அதில் நம்பர் எழுதி குறியீடு செய்னர். கள் ஊன்றப்பட்ட இடங்களில் பெரிய ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு நடத்தப்போவதாக தகவல்கள் கூறப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இடையக்கோட்டை மலைப்பகுதியில் அடிக்கடி விமானம் பற்து செல்வதால் இந்திய நில அறி வியல் துறையினர் ஆய்வு நடத்துகிறார்கள் என்று விவ சாயிகள் மத்தியில் பேசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலி மருத்துவர்கள் கைது
சின்னாளபட்டி, ஏப்.12- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் சித்தா கிளினிக் என்ற பெயரில் மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். இந்த போலி மருத்துவரை மாவட்ட மருத்துவ அலுவலரின் பரிந்துரையின் பெயரில் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்கு நர் பூமிநாதன் தலைமையில் செந்துறை பகுதியில் மருத்து வமனையில் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்ட னர். அப்போது செந்துறையில் சுபாஷ் என்பவர் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் செய்வது விசாரணையில் தெரியவந்தது . இதைதொடர்ந்து அவரை கைது செய்த நத்தம் போலீசார் அவர் வைத்திருந்த ஊசி, மாத்திரை, மருந்துகளை கைபற்றி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
தந்தையை கொன்ற மகன் கைது
திருவில்லிபுத்தூர், ஏப்.12- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் அருகே கிருஷ்ணப்பேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (52). இவரது மனைவி சித்ரா(45). இவரது மகன் மணிகண்டன்(27). மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். ஆறு முகம் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் விவ சாயம் செய்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆறு முகம் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆறு முகம் மது போதையில் மாடியில் இருந்து உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணபேரி கிராம நிர்வாக அலுவலர் உமாராணி அளித்த புகா ரில் மல்லி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கடந்த 10 ஆம் இரவு குடிபோதையில் வந்த ஆறுமுகம் மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மணிகண்டன் தாக்கியதில் மாடியில் இருந்து விழுந்து ஆறுமுகம் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய மல்லி காவல்துறையினர் மணி கண்டனை கைது செய்தனர்.
மதுரையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு முகக்கவசம் அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தல்
மதுரை, ஏப்.12- தமிழகத்தில் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மதுரையிலும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி மதுரையில் கடந்த 4 நாள்களில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 38 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வரு கின்றனர். இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சைப் பெறுகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு கடுமையாக உள்ள ஓரி ருவர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிதாக கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 34 படுக்கைகளும், தேவையான மருத்துவ உபகரணங்களும் தயார் நிலை யில் உள்ளன. இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்து வர்கள் கூறுகையில், மதுரையில் தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. தினசரி 5 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்ற னர். அதற்கு ஏற்றாற்போல், தினசரி கொரோனா பரிசோத னையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாதிக் கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டு தனி மைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கின்றனர். மூச்சுத் திணறல் ஏற்படுபவர்கள் மட்டும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது பரவி வரும் இந்த வகை கொரோனா, சர்க்கரை, இதய பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோயாளி களை குறி வைத்து தாக்குகிறது. எனவே, இணை நோய் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது, கண்டிப்பான முறை யில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கச வம் அணிந்தால், நோய் பரவல் குறைய வாய்ப்பு ஏற்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரையில் ரேபிடோ பைக் டேக்சிக்கு தடை
மதுரை, ஏப். 12- மதுரையில் ரேபிடோ பைக் டேக்சி புக்கிங் செய்து செல்வ தற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி செயல்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. “ரேபிடோ புக்கிங் டாக்ஸி “ என்ற கர்நாடகா மாநிலத்தை தலைமைய கமாக கொண்ட ஒரு தனியார் நிறு வனம் மதுரையில் வாடகை கார்கள் இயங்குவது போல் ஆன்லைன் மொபைல் ஆப் வழியாக பொது மக்களிடம் www.rapido.bike என்ற வெப்சைட் மூலம் பொதுமக் களை தொடர்புகொண்டு மோட்டார் வாகன சட்டங்கள் / விதிமுறை களின்படி முறையான அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட இரண்டு சக்கர வாகன உரி மையாளர்களை உறுப்பினர்கள் ஆக்கி மதுரை மாநகரில் அனுமதி யற்ற வகையில் புங்கிங் டாக்சிகள் இயக்கி வருவது தெரியவந்தது. 40 - க்ம் மேற்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் மீது மதுரை மாநகர வட்டார போக்குவரத்து அதி காரிகள் மூலம் கடந்த வாரம் நட வடிக்கை எடுக்கப்பட்டு , இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. மதுரை மாநகர காவல் ஆணை யர் நரேந்திரன் நாயர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களின் அறிவு ரைப்படி சட்டப்படி அங்கீகாரம் பெறாத “ ரேபிடோ புக்கிங் டாக்ஸி” நிறுவனத்திடம் மொபைல் செயலி வழியாக தொடர்புகொண்டு வாட கைக்கு இரண்டு சக்கர வாக னங்களை இயக்கும் வாகன உரிமை யாளர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் , மதுரை சரக போக்குவரத்து இணை ஆணை யர் பொன்செந்தில் நாதன் , வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்கார வேலு , ( தெற்கு ) , சித்ரா , ( வடக்கு ) , ஆகியோர்களு டன் இணைந்து “ ரேபிடோ புக்கிங் டாக்ஸி “ வாகனத்தை பறிமுதல் செய்ய ஏப்ரல் 12 முதல் முடிவு எடுத்து தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது . இந்த நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது மக்கள் , இந்த நிறுவனத்தின் மூலம் தங்களது இரண்டு சக்கர வாக னங்களை பைக் டேக்சிக்கு பயன்படுத்தக்கூடாது என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.