districts

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி டிஆர்இயு - சிஐடியு ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.2-  ஒன்றிய அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண் டும் எனக் கோரி டிஆர்இயு - சிஐ டியு தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரையில் புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவு வாயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் எம்.சி. ஆன்ட்ரன் தலைமை வகித்தார்.  கோட்ட பொருளாளர் பி.சர வணன் முன்னிலை வகித்தார். உதவி பொதுச்செயலாளர் ஆர்.திருமலைஅய்யப்பன், கோட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், ஏஐ எல்ஆர்எஸ்ஏ முன்னாள் கோட்டச் செயலாளர் ஆர்.கண்ணன் ஆகி யோர் விளக்கிப் பேசினர். சிஐ டியு மாவட்ட நிர்வாகி விவேகா னந்தன் ஆதரித்துப் பேசினார். கோட்ட இணைச் செயலாளர் ஆர்.சங்கரநாராயணன் சிறப்பு ரையாற்றினார். கோட்ட உதவித் தலைவர் பா.வினோத் பாபு நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், நீண்ட காலமாக உள்ள ரயில்வே காலி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ரயில்வே நிலையங் கள், ரயில்வே பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண் டும், கொரோனாவால் பாதிக்கப் பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கிட வேண்டும், தமிழக ரயில்வே திட் டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கிட வேண்டும், மதுரை - இராமேஸ்வ ரம், மதுரை - கோயம்புத்தூர் வழி தடங்களில் அதிக ரயில்களை இயக்கிட வேண்டும், கிளஸ்டர்  ரயில்கள், கன்னியாகுமரி - எர்ணா குளம், தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னி யாகுமரி, கோவைக்கு இயக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.