பழனி,டிச.31- குழந்தை பாதுகாப்பு குழுக்களை ஒவ்வொரு ஊரிலும் வலுப்படுத்த வட்டார அளவில், காவல் நிலைய அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் வலியுறுத்தியுள் ளார். மதுரையில் அன்னை சத்யா குழந்தை பாதுகாப்பு இல்லம் உட்பட பல குழந்தை பாதுகாப்பு இல்லங்க ளில்மாநில அளவிலான ஆய்வுக் குழு ஆய்வு நடத்தியது. இக்குழுவில் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி தமிழ்நாடு குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய டாக்டர் வீ. ராமராஜ், மருத்துவத்துறை துணை இயக்குநர் லதா, தொண்டு நிறுவன இயக்குநர் சுஜாதா ஆகியோர் இருந்தனர்.
இதுகுறித்து ஆணைய உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை உரிமை செயல்பாட்டாளர் கள் தமிழக அரசு குழந்தைகள் பாது காப்பு கொள்கையை வெளியிட வேண்டும் என்று கோரி வந்தனர். கடந்த மாதம் தமிழக முதல மைச்சர் அரசு குழந்தைகள் பாது காப்பு கொள்கையை வெளியிட்டார். இந்த கொள்கை தமிழகத்தில் குழந் தைகள் உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய மைல்கல். பள்ளிகளில் குழந்தைகள் பாது காப்பு மற்றும் குழந்தைகளிடையே சட்டத்தை மதிக்கும் கலாச்சாரத்தை வளர்க்க பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை தவறாமல் நடத்தவேண் டும். பள்ளிகளில் குழந்தை பாது காப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை அரசாணை (GO 83/2021) வெளியிட்டுள்ளது. இக்குழு வில் பள்ளியின் தலைமை ஆசிரியர், இரண்டு ஆசிரியர்கள், ஆசிரியர்- பெற்றோர் கழகத்தின் இரண்டு பிரதி நிதிகள் அல்லது இரண்டு பெற் றோர்,ஆசிரியர் அல்லாத ஊழியர் ஒருவர், பள்ளி நிர்வாக பிரதிநிதி, வெளி நபர் ஒருவர் கொண்ட குழந்தை பாது காப்பு குழுக்களை அனைத்து பள்ளி களிலும் வலுப்படுத்த போதிய பயிற்சி அளிக்கலாம்.
சமூக நலத்துறை அரசாணை எண் 30 மூலம் கிராம குழந்தைகள் பாது காப்புகுழு, வட்டார அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கள் அமைக்கப் பட்டுள்ளன. இதைப் போலவே சமூ கநலத்துறை அர சாணை எண் 31 மூலம் பேரூராட்சி, நகராட்சி குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் மாநகராட்சிகளில் மண்டல அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்து வகையான குழந்தை கள் பாதுகாப்புக்குழுக்களையும் கண் காணிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளது. இதைப் போல அனைத்து ஊராட்சிகளிலும் குழந்தை திருமண தடுப்பு குழுக்களை சமூக நலத்துறை உருவாக்கி வரு கிறது.
இக்குழுக்களை வலுப்படுத்த ஒவ்வொரு ஊரிலும் கிராம குழந்தை கள் பாதுகாப்பு குழுக்களில் ஊராட்சி செயலாளரை அமைப்பாளராகவும் ஒருங்கிணைப்பாளராக கிராமத்தில் உள்ள தலைமை ஆசிரியரையும் நிய மிக்கலாம். ஒவ்வொரு காவல் நிலைய பகுதி யில் உள்ள கிராம குழந்தைகள் பாது காப்பு குழுக்களில் உறுப்பினராக உள்ள குழந்தைகள் நல காவல் அலுவலர் அவரது பகுதியில் உள்ள குழுக்களின் ஒருங்கிணைப்பாளராக வும் வட்டார அளவில் அப்பகுதியில் உள்ள கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் குழந்தை திருமண தடுப்பு குழுக்களின் வட்டார ஒருங் கிணைப்பாளராக சமூக நலத்துறை யின் விரிவாக்க அலுவலர்களும் செயல்பட வேண்டும். மாவட்ட ஆறு வகையான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பாது காப்பு குழுக்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC), சிஇஓ (CEO), டிஎஸ்டபிள்யுஓ ( dswo) ஆகியோர் இணை மாவட்ட ஒருங்கி ணைப்பாளராகவும் செயல்படலாம். இவ்வாறு ஒருங்கிணைப்பு ஏற்பட்டால் குழந்தைகள் பாதுகாப்பிற்கு உதவி யாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.