தேனி, அக்.26- ரேசன் பொருள் தரம் குறித்து தேனி நகரில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். தேனி-அல்லிநகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, பாலன் நகர் மற்றும் தெற்கு புதுத்தெரு ஆகிய பகுதிகளில் தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நியாய விலைக் கடைகளில் விற்பனை முனைய இயந்தி ரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர் களுக்கு பொருட்கள் விநி யோகம் செய்யப்பட்ட எண் ணிக்கை, வழங்கப்பட வேண் டிய குடும்ப அட்டைதாரர் களின் எண்ணிக்கை, மீத முள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட் களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார். மேலும், நியாய விலைக் கடைகளுக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் நியாய விலைக்கடை களின் அருகில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இம் மாதம் வழங்கப்பட்ட அரிசி மற்றும் இதர பொருட்களின் தரம், நியாய விலைக் கடை யின் செயல்பாடுகள் குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வழங்கல் அலுவ லர் மு.சாந்தி உட்பட சம் பந்தப்பட்ட துறை அலுவ லர்கள் உடனிருந்தனர்.