districts

img

இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவிற்கு புத்தகங்கள் வழங்கும் கொடையாளர்கள்

இராமநாதபுரம், பிப்.2- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்த கத் திருவிழாவிற்கான கொடையாளர்கள் மூலம் புத்தகங்கள் பெறப்படும் பெட்டி யில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம்  வர்கீஸ் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினார். பின்னர் ஆட்சியர்  தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற  9 ஆம் தேதி முதல் 19 ஆம்  தேதி  வரை  புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. இவ்விழாவையொட்டி கொடையாளர்களி டமிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் புத்தகத் திருவிழாவில் பயன்படுத்த உள்ளன. இதன் நோக்கம் இன்றைய இளைய சமுதாயம் புத்தகம் வாசிக்கும் தன்மையை அதிகரிக்க வேண் டும் என்பதே ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரி யும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்க ளால்  100க்கும் மேற்பட்ட புத்தகங்  கள் பெறப்பட்டு வருகின்றன. இதே போல் மாவட்டத்தில் இரண்டுவருவாய் கோட்  டாட்சியர் அலுவலகங்கள் மற்றும்  அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களி லும் கொடையாளர்களிடமிருந்து நாள் தோறும் புத்தகங்கள் பெறப்பட்டு வரு கிறது. எனவே பலர் பயன்பெறும் வகை யில் எழுத்தாளர்கள், அறிஞர்கள், பொது மக்கள் அனைவரும் புத்தகங்கள் வழங்கி மாவட்டத்தில் இளைய சமுதாயத்தினர் வாசிப்பு தன்மையை அதிகரித்திட உறு துணையாக இருந்திட வேண்டும் என்று  தெரிவித்தார்.