districts

img

மதுரையில் குருதிக் கொடை பாசறை

மதுரை, மே 6- மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம்,  வள்ளலார் மன்றம் இணைந்து மதுரை  அரசு இராசாசி மருத்துவமனை குருதி வங்கிக்கு வழங்கும் பொருட்டு குருதிக் கொடை பாசறை நடை பெற்றது.

தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத் தலைவர் 114 முறை  குருதி வழங்கிய கொடைஞர் பி.வரத ராசன் தலைமையில் அரசு இராசாசி  மருத்துவமனை குருதி வங்கித் தலைவர் மரு.சிந்தா முன்னிலை யில், மதுரை அரசு இராசாசி மருத்துவ மனை மேனாள் முதன்மையர் இரத்தினவேல் குருதிக் கொடை பாசறையை தொடங்கி வைத்தார்.

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கச் செயலர் வழ.மாரியப்பமுரளி, மணியம்மை பள்ளி இயக்குநர் அமுது.இரசினி, காந்தி அருங்காட்சியக பேராசிரியர் சபுராபீபி, தமிழ் வழக்காடு மொழியாக தொடர் போராட்டம் நடத்தும் வழ.பகத்சிங், சிம்மக்கல் கோனார்கடை உரிமை யாளர் இராசேந்திரன், நல்லமணி பேருந்து உரிமையாளர் வைரம், அவரது மனைவி பிரியா, மதுரை மாவட்ட நீதிமன்ற உயர் அலுவலர் சுந்தரமூர்த்தி, நிலா இலக்கிய அமைப்பாளர் ‘கவிக்குயில்’ கணேசன், திக மாவட்டப் பொறுப்பா ளர் திருப்பதி, சமூக ஆர்வலர் ஆட்டோ  வெற்றிச் செல்வன், ஆசிரியர் மோகனக்கண்ணன், வழ.சோலைப் பாண்டி, பெரு வணிகர் ‘கிட்டங்கி’ பாண்டியராசன், மரம் நடும் இயற்கை ஆர்வலர் திலகராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.