districts

img

சிறைக்குள் நூலகம் அமைக்க தேனி புத்தக கண்காட்சியில் புத்தக தானம்

தேனி ,மார்ச்.10- தேனி மாவட்டத்தில் முதல் புத்தக கண்காட்சி   தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அம்சமாக சிறைத் துறை அதிகாரிகள் கூண்டுக்குள் வானம் என்று பிரம்மாண்டமான பெட்டி வைத்துள்ளார்கள்.அந்தப் பெட்டியில் சிறைக்குள் நூலகம் அமைக்க புத்தக தானம் பெறு கிறார்கள்.தினமும் ஏராளமா னோர் தாங்கள் படித்த புத்தகங் கள் அல்லது புதிதாகவும் புத்தகம்  வாங்கி புத்தகதானம் செய்கிறார் கள் .தமுஎகச மாநிலக்குழு உறுப் பினரும் நாடக இயக்குனருமான சுருளிப்பட்டி சிவாஜி புத்தக தானம் வழங்கினார். மாவட்ட செயலாளர் அய்.தமிழ்மணி மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.