districts

img

போர் வேண்டாம்; சமாதானம் தான் சாத்தியம்

சிவகங்கை, மார்ச்.8- உலகில் சமாதானமே சிறந்தது போரை தவிர்க்க வேண்டும் உக் ரைன் மருத்துவ மாணவி பார்கவி  கூறினார். ரஷ்யா-உக்ரைன் ராணுவ மோதலையடுத்து அங்கு மருத்து வக் கல்வி படித்துவரும்  சிவகங்கை மாணவி பார்கவி கூறியதாவது:- உக்ரைனில் ராணுவ மோதல் நடைபெற்று வந்த நிலையில் ஒரு நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் இனிமேல் வகுப்புகள் நடைபெறாது பாதுகாப்பான பகுதியில் தங்கியி ருங்கள் என்றார். ராணுவ மோத லால் உணவு கிடைக்கவில்லை. ரொட்டிகள் மட்டும் கிடைத்தது. ஏடிஎம்-கள் செயல்படவில்லை. நாங்கள் தங்கியிருக்கும் பகுதி யில் இருந்து ரயில் நிலையம் வரு வதற்கு ரூ.30,000 கார் வாடகை கொடுத்தோம். ரயில் நிலையத்தில் இருக்கையை உறுதி செய்ய ரூ.60 ஆயிரம் கேட்டார்கள்.ஆனால் ரயி லுக்கு  கட்டணம் கிடையாது.  தூதரகத்தில் காத்து நின்று தடையில்லா சான்றிதழ் பெற நாள் கணக்கில் காத்து கிடந்தோம். போலந்து விமான நிலையம் வருவதற்கு பல நாட்கள் ஆனது.  போலந்திலிருந்து ஒன்றிய அரசு இலவசமாக விமானத்தில் அழைத்து வந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  போர் பதற்றத்தின் மத்தியில்  பரிதவித்து நின்ற தமிழ் மாணவர்களோடு பேசி தைரியம் கொடுத்தார். உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கும் அனை வரும் உக்ரைன் மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றார். மருத்துவக்கல்வியை இந்தியா வில் நிறைவு செய்வதற்கு தமிழக அரசும். ஒன்றிய அரசும் வழிகாட்ட வேண்டுமென்றார். மாணவி பார்கவி மானாமதுரை யில் சமூக சேவை செய்து வரும் ஷெர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆகியோரின் மகளா வர். இவர்களது மற்றொரு மகளும் உக்ரைனில் தான் மருத்துவக் கல்வி  படித்து வருகிறார்.