districts

img

டிஎன்எஸ்டிசி மேலாளரின் தொழிலாளர் விரோதம் குழித்துறையில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

குழித்துறை, பிப்.26- கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகத்தின் குழித்துறை பணிமனை1-ல் கிளை மேலாளராக சிவசக்தி  ஐய்யப்பன் பணியாற்றி வரு கிறார். இவர் இப்பணிமனையில் ஊழியர்களிடம் அராஜகமாக நடந்துகொள்வதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து நடத்துநராக பணிபுரியும் பால சுப்பிரமணியம் என்பவர் தன்னு டைய மகளின் மேற்படிப்பு சேர்க் கைக்காக விடுப்பு கேட்டுள் ளார். இதற்கு மறுப்பு தெரிவித் துள்ளார் மேலாளர். மகளின் மருத்துவ படிப்பு கனவு வீணாகும் என்பதால் சுப்பிரமணியம் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு மகளின் மருத்துவ படிப்பு சேர்க்கைக்காக சென்றுள்ளார். திரும்பிவந்த போது பணியில் சேர விடாமல் கெடுபிடி செய்துள் ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியம் தற் கொலை செய்ய முயற்சி செய் துள்ளார். அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறார். அதிகாரியின் அராஜக செயலைக் கண்டித்து குழித்து றை பணிமனை 1 இல் சிஐடியு சார்பில் துணைக்குழு செயலா ளர் ஸ்டான்லிறாபர்ட் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி அஜி, அசோக் குமார், ஏசுதாஸ், ரசல் ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.