திண்டுக்கல், ஜுன் 20- ஜனநாயக உரிமைகளை பாது காப்பதற்கான போராட்டத்தை திமுக, இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து நடத்தும் என்று அமைச் சர் ஐ.பெரியசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் முத லமைச்சர் கோப்பை விளையாட் டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பதக்கம், சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கும் விழா திங் களன்று நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2 ஆவது பரிசாக ரூ.2 ஆயிரம், 3 ஆவது பரி சாக ரூ.1000 என 1737 பேருக்கு ரூ. 41.58 லட்சம் மதிப்பிலான பரி சுத்தொகையை தமிழக கூட்டு றவுத்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, நாடாளு மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில் குமார், காந்திராஜன், மேயர் இள மதி, துணை மேயர் ராஜப்பா, விளை யாட்டுத்துறை அதிகாரிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி மனித உரிமைகளை, ஜன நாயக உரிமைகளை பாதுகாப்ப தற்கான போராட்டத்தை தோழமை சக்திகளான இடதுசாரிக் கட்சிகளு டன் இணைந்து திமுக நடத்தும் என் றார். மேலும் விழாவில் அமைச்சர் பேசுகையில், இன்றைக்கு விளை யாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப் பில் 3 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மாணவ, மாணவியர்கள் சாதனைகள் செய்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு டேக் வாண்டோ என்ற தற்காப்பு கலை யை மாணவ, மாணவியர்களுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறார். 1973 ஆம் ஆண்டிலிருந்து விளை யாட்டு போட்டிகளை நடத்தி விளை யாட்டு வீரர்களை உருவாக்கி உள் ளேன். 1984 ஆம் ஆண்டு நான் சோவி யத் ரஷ்யா சென்று வந்தேன். அங்கு 5 வயது மாணவனை விளை யாட்டு விடுதியில் சேர்த்து பயிற்சி அளிக்கிறார்கள். அனைத்து விளை யாட்டுகளையும் சொல்லித் தரு கிறார்கள். அப்படி சொல்லித் தந்த தால்தான் உலக அளவில் நடை பெறும் போட்டிகளில் ரஷ்ய விளை யாட்டு வீரர்கள் ஏராளமான கோப்பைகளையும் பதக்கங்களை யும் வெல்கிறார்கள். கிராமப்புறங் களில் வைரம், வைடூரியங்களாக உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்க வேண்டும். இந்திய மண்ணுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.