districts

ரூ.100 கோடி நட்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்

சென்னை, மார்ச் 26-  துபாய் எக்ஸ்போ 2022 இல் கலந்து கொண்டு தமிழகத்திற்கு  அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் வெளிநாட்டுப் பயணமாக துபாய் சென்றுள்ளார். முதல்வரின் இந்தப் பணம் குறித்து தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல் அவதூறு  பரப்பியதாகவும், அதற்காக அவர் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில்  அவருக்கு வழக்கறிஞர்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக சார்பில் அதன் அமைப்பு செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீஸில், “திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக  அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய்  எக்ஸ்போ 2022-இல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத் தியும், உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள். முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும்  அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்பு களை ஈர்ப்பது. முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக  முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம்  விளைவிப்பதாக இருக்கிறது. இதற்காக நீங்கள்  பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு  கேட்க வேண்டும். அதேபோல், நட்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்”என்று கூறப்பட்டுள்ளது.