மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டக் குழு 2023 மே மாதம் உழைப்பாளி மக்களை வீடு வீடாக சந்தித்து நிதி திரட்டுவது; இதன் மூலம் மக்கள் கூறும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்குத் தீர்வு காண்பது என முடிவு செய்தது. 3200க்கும் மேற்பட்ட கட்சித் தோழர்களைக் கொண்ட கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன. தொடர்ந்து மே 7 முதல் மே 21 வரை மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு-நிதி திரட்டும் இயக்கம் நடைபெற்றது. இதில் 406 குழுக்களில் 1,917 தோழர்கள் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் பரந்து விரிந்தது. ஒவ் வொரு பகுதியிலும் மக்கள் வாழ்நிலை, அவர் களது தேவைகள், முன்வைக்கும் கோரிக்கை கள் மாறுபட்டதாக இருந்தது. குறிப்பாக அந் தந்த பகுதி அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டை சீர் தூக்கிப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் இந்த மக்கள் சந்திப்பு உருவாக்கிக் கொடுத்துள் ளது. கட்சி தலையிட்டு இயக்கங்கள் நடத்திய பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் சந்திப்பு நடைபெற்றது. இது உத்வேகம் அளிப்பதாக இருந்தது மட்டுமல்ல; மக்களுடன் உள்ள உயிரோட்டமான தொடர்பை மீண்டும் புதுப் பித்துக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது. * மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி ஒன்றி யம் 100 சதவீதம் கிராமங்களை உள்ளடக்கிய பகுதி. பேரூராட்சி, நகராட்சி ஒன்று கூட இல்லை. இங்குள்ள சமத்துவபுரத்தில் மொத் தம் 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் உண்டியல் ஏந்திச் சென்ற மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.4,300 அளித்தனர். இதற்கு 100 நாள் வேலை வழங்குவதற்கான போராட்டம், முதியோர், விதவைகளுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தரு வதற்கு கட்சி எடுத்த முயற்சிகளே காரணம். ஜெயராஜ் நகரில் 40 குடும்பங்கள், ஜனதா காலனியில் 20 குடும்பங்கள் உள்ளன, இவர்கள் அளித்தது ரூ.2020. இந்த 60 குடும்பங்களின் அடிப்படைத் தேவை களுக்காகப் போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. செல்லம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தண்ணீர் வசதி செய்து தரவேண்டுமென்ற கோரிக்கையில் கட்சி தலையிட்டு தண்ணீர் வசதியை பெற்றுத்தந் துள்ளது. இப்பகுதியில் மக்கள் ஒரே நாளில் ரூ.4,900 வழங்கினர்.
க.பூசாரிப்பட்டி கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெ டுத்து அதில் கட்சி வெற்றி பெற்றது. இந்த கிராம மக்கள் மகிழ்வுடன் நிதியளித்தது நிறைவாக இருந்தது. * மதுரை மேற்கு ஒன்றியத்தில் சில மாநக ராட்சி வார்டுகள் தவிர அனைத்தும் கிராமம் சார்ந்த பகுதிகள் தான். தேனூர் பகுதியில் செக்டேம் அமைப்பதற்காகப் போராடியது, நெல்கொள்முதல் நிலையம் அமைக்கக் குரல் கொடுத்தது, சமயநல்லூர் ஊராட்சி, பரவை பேரூராட்சி அருகே உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுவர குரல் கொடுத்தது, ரேஷன் கடைப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தது, பேருந்து வசதி கேட்டுப் போரா டியது- மக்கள் சந்திப்பிற்கு துணை நின்றது. மத்திய தர மக்கள் வசிக்கும் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால் நிதி தாரளமாக வழங்கினர். இருப்பினும் மாநகராட்சியின் விரி வாக்கப்பகுதியில் போதுமான அடிப்படை வசதிகள் வேண்டும்; தற்போது நடைபெறும் பாதாளச்சாக்கடை, குடிநீர் குழாய்ப் பணி களை விரைவாக முடிக்கச் சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டனர். வாடிப்பட்டி ஒன்றியத்தில் வாடிப்பட்டி, சோழவந்தான், குருவித்துறை உட்பட பரவ லாக வசூல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மக்கள் பிரச்சனைகளுக் காகப் போராடுவதற்காக நிதி கேட்பார்கள். அது போல் இப்போதும் போராட்டங்களுக்கு நிதி திரட்ட வந்துள்ளீர்கள் என்ற வார்த்தை களை அதிகம் கேட்க முடிந்தது.
குறிப்பாக சோழவந்தான் ரயில்வே மேம் பாலத்தை திறப்பதற்கு பல்வேறு போராட்டங் களை நடத்தியது சோழவந்தான் பகுதியில் நிதி திரட்டுவதற்கு பேரூதவி செய்தது. குரு வித்துறை சாக்கடை வசதி கேட்டு போராடி யதன் விளைவாக ரூ.3 லட்சம் செலவில் சாக்கடை வசதி செய்து கொடுக்கப்பட்டுள் ளது. மன்னாடிமங்கலம்-இரும்பாடி இடையே பாலம் அமைக்க வேண்டுமென்ற தலையீடு வெற்றி பெற்று தற்போது அதற்கான பணி கள் நடைபெற்றுவருகிறது. அந்த கிரா மங்களில் மக்கள் சந்திப்பின் போது இதைச் சொல்லியே மக்கள் நிதியளித்ததையும் பார்க்க முடிந்தது. * மதுரை கிழக்கு ஒன்றியம் யா.ஒத்தக்கடை யில் உள்ள நான்கு கிளைகளில் மட்டும் ரூ.76 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். மேலூர் பகுதியிலிருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் ஒத்தக்கடை அருகே உள்ள பெரியாற்று பாலம் அருகே நிறுத்தப்படு கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாகக் கிடைப்பதில்லை. சாலை போட்ட இடங்களிலேயே போடுகிறார்கள். போடாத இடங்களில் சாலை போடச் சொல்லுங்கள் என்றனர் மக்கள். * தே.கல்லுப்பட்டியில் ஒரு மூதாட்டி கட்சி நிதியாக ரூ.20 வழங்கினார். அவரிடம் துண்டுப்பிரசுரத்தை வழங்கிவிட்டு மற்ற வீடுகளில் வசூல் நடைபெற்றது. அங்கு வந்த மூதாட்டி தாம் கொடுத்த ரூ.20-ஐ பெற் றுக்கொண்டு ரூ.100 நிதியாக வழங்கினார். அதற்கு அவர் கூறிய காரணம், நீங்கள் நோட்டீசில் கொடுத்துள்ள விவரங்கள் சரியானது என்றார்.
குறிப்பாக சோழவந்தான் ரயில்வே மேம் பாலத்தை திறப்பதற்கு பல்வேறு போராட்டங் களை நடத்தியது சோழவந்தான் பகுதியில் நிதி திரட்டுவதற்கு பேரூதவி செய்தது. குரு வித்துறை சாக்கடை வசதி கேட்டு போராடி யதன் விளைவாக ரூ.3 லட்சம் செலவில் சாக்கடை வசதி செய்து கொடுக்கப்பட்டுள் ளது. மன்னாடிமங்கலம்-இரும்பாடி இடையே பாலம் அமைக்க வேண்டுமென்ற தலையீடு வெற்றி பெற்று தற்போது அதற்கான பணி கள் நடைபெற்றுவருகிறது. அந்த கிரா மங்களில் மக்கள் சந்திப்பின் போது இதைச் சொல்லியே மக்கள் நிதியளித்ததையும் பார்க்க முடிந்தது.
* மதுரை கிழக்கு ஒன்றியம் யா.ஒத்தக்கடை யில் உள்ள நான்கு கிளைகளில் மட்டும் ரூ.76 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். மேலூர் பகுதியிலிருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் ஒத்தக்கடை அருகே உள்ள பெரியாற்று பாலம் அருகே நிறுத்தப்படு கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காண வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாகக் கிடைப்பதில்லை. சாலை போட்ட இடங்களிலேயே போடுகிறார்கள். போடாத இடங்களில் சாலை போடச் சொல்லுங்கள் என்றனர் மக்கள்.
* தே.கல்லுப்பட்டியில் ஒரு மூதாட்டி கட்சி நிதியாக ரூ.20 வழங்கினார். அவரிடம் துண்டுப்பிரசுரத்தை வழங்கிவிட்டு மற்ற வீடுகளில் வசூல் நடைபெற்றது. அங்கு வந்த மூதாட்டி தாம் கொடுத்த ரூ.20-ஐ பெற் றுக்கொண்டு ரூ.100 நிதியாக வழங்கினார். அதற்கு அவர் கூறிய காரணம், நீங்கள் நோட்டீசில் கொடுத்துள்ள விவரங்கள் சரியானது என்றார்.