விருதுநகர், மே 9- விருதுநகர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.23 லட்சம் மதிப்பிலான 150 செல்பேசிகளை மீட்ட காவல்துறை யினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக் கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளை யம் ஆகிய 6 உட்கோட்ட பகுதிகளில் 150 செல்பேசிகள் காணாமல் போனது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவற்றைத் தேடி வந்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 23 லட்சம் ஆகும். இதையடுத்து, 150 செல்பேசிகளையும் போலீசார் மீட்ட னர். மேலும், 6 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 86 ஆயிரத்து 190 மோசடியாக வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி அப்பணத்தை மீட்டனர். இந்நிலையில், 150 செல்பேசிகளையும், மோசடி செய்யப்பட்ட பணத்தையும் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் உரியவர்களிடம் வழங்கி னார். மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி வண்ணன், சார்பு ஆய்வாளர் ஆருன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.