சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல் தளத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தரப் புகைப்படக் கண்காட்சியினை மே 27 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி திறந்துவைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.