districts

img

ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

ஒட்டன்சத்திரம், செப்.11-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் ஆசிரியர் தினத்தை ஒட்டி கான்பிடென்ட்  செஸ் அகாதெமி சார்பில் மாவட்ட அள விலான செஸ் போட்டி நடைபெற்றது. 9,12,15 ஆகிய வயதுகளின் அடிப்படை யில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல், வத்தலகுண்டு, வேடசந்தூர், குஜிலியம் பாறை, பழனி, நிலக்கோட்டை, ஒட்டன்சத்தி ரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 120 மாணவ,  மாணவிகள் பங்கேற்றனர். இறுதிப்போட்டி யில் 60 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்ற னர். நடுவர்களாக ரமேஷ்குமார், கோபி கிருஷ்ணன், தங்கதுரை, சரண்குமார் ஆகி யோர் பணியாற்றினர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிச ளிப்பு விழாவிற்குப் பள்ளி முதல்வர் சேசுச வேரி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசி ரியர் ராம்குமார் வரவேற்றார். ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் திருஞானசம்பந்தம் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு  வெற்றி பெற்ற மாணவ, மாணவி களைப் பாராட்டி, சான்றிதழ், கேடயம் வழங்கினர்.  போட்டிக்கான ஏற்பாடுகளை கான்பி டென்ட் செஸ் அகாதெமி ஒருங்கிணைப்பா ளரும், செயலாளருமான சண்முககுமார், தலைவர் பிரபாகரன் மற்றும் பொறுப்பா ளர்கள் செய்திருந்தனர். துணைத் தலை வர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.